திண்டுக்கல், மார்ச் 30- திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி சார்பில் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகு தியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தம் சனிக்கிழமை காலை திண்டுக்கல் நகர் பகுதிக ளில் கூட்டணி கட்சி தலைவர்க ளோடு வாக்கு சேகரிப்பில் ஈடு பட்டார்.
மணிக்கூண்டு ஆர்.எஸ் சாலை பகுதியில் துவங்கிய பிரச்சாரப் பயணம், தங்கம் லாட்ஜ், சோலை ஹால் ரோடு, என்.எஸ். கம்யூனிட்டி ஹால், அண்ணாமலையார் பள்ளி, டிப்போ ரோடு, பாரதிபுரம் போஸ்ட் ஆபீஸ் ரோடு, சந்தை ரோடு, நாகல் நகர், சிறுமலை செட் ரோடு, வேடபட்டி, பர்மா காலனி,குள்ள னம்பட்டி, கிழக்கு மரியநாதபுரம், தேவசகாய நகர், மேற்கு மரியநாத புரம், அனுமந்த நகர் மேம்பாலம் ஆகிய பகுதி மக்களிடையே வாக்கு சேகரிப்பு நடைபெற்றது.
வாக்கு சேகரிப்பு பிரச்சாரப் பய ணத்தில் திண்டுக்கல் மேயர் இளமதி ஜோதி பிரகாஷ், துணை மேயர் ராஜப்பா, திமுக மாவட்ட துணைச் செயலாளர் பிலால், விசிக மாவட்டச் செயலாளர் மைதீன் பாவா, காங்கிரஸ் மாநகர் மாவட்டச் செயலாளர் மணிகண்டன், சிபிஎம் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி, ஆறுமுகநயினார், மாநிலக் குழு உறுப்பினர்கள் கோ பிக்குமார், மாரியப்பன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.பிரபாக ரன், நகரச் செயலாளர் அரபு முக மது, ஒன்றியச் செயலாளர் சரத், நகர் குழு, ஒன்றியக்குழு தோழர் கள், பொதுமக்கள் என திரளாக பங்கேற்றனர்.
திண்டுக்கல் நகர் செயலாள ரும் மாநகராட்சி துணை மேயரு மான ராஜப்பா துவக்கி வைத்து பேசுகையில், ‘‘திமுக தலைமையி லான அரசு நிதி நெருக்கடி உள்ள போ திலும் மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட பல மக்கள் நல திட்டங் களை அமல்படுத்தி வருகிறது. ஆனால் இந்த திட்டங்களை எல்லாம் முடக்க வேண்டும் என்பதற்காகவே மாநிலத்திற்கு தர வேண்டிய நிதியை பாஜக அரசு தர மறுத்து வருகிறது.
பாஜகவின் மக்கள் விரோத அரசை நாம் அகற்ற வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் பாஜகவை தூக்கி எறிய வேண்டும். அதற்காக ‘இந்தியா’ கூட்டணியின் வேட்பா ளரான நமது வேட்பாளர் சச்சிதா னந்தத்திற்கு நீங்கள் எல்லோரும் அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திலே வாக்களியுங்கள்’’ என்று கூறினார்.
பிரச்சாரத்தில் வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தம் பேசுகையில், ‘‘பாஜக அரசு மோடியின் கேரண்டி என பொய் பிரச்சாரங்களை செய்து வருகிறது. அவர்கள் கொடுத்த கேரண்டி எல்லாம் ஏமாற்றம் மட்டுமே. கடந்த 2014-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது கருப்பு பணத்தைஒழித்து ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் பணம் பிரித்துக்கொடுக்கப்படும் என்று கூறிய கேரண்டி என்ன ஆனது? ஆண்டுக்கு 2 கோடிப் பேருக்கு வேலை வழங்குவதாக கூறிய கேரண்டி என்ன ஆனது? விவசாயிகளின் விளைபொருட்களுக்கான உரிய விலை கொடுக்கப்படும் என்ற வாக்குறுதி என்ன ஆனது?’’ என்று கேள்விக்கணைகளை தொடுத்தார்.
மேலும் பேசிய அவர், கருப்புப் பணத்தை ஒழிப்பதாக கேரண்டி கொடுத்த பாஜக என்ன செய்துள்ளது தெரியுமா? ஈடி, ஐடி மூலம் பல நிறுவனங்களை மிரட்டி தேர்தல் பத்திரங்கள் மூலம் கருப்பு பணத்தை வெள்ளையாக ஆக்கியுள்ளது. இளைஞர்களுக்கு 2 கோடி வேலை தருவேன் என்று கேரண்டி கொடுத்த மோடி, ரயில்வே துறையை தனியாருக்கு திறந்து விட்டுள்ளார். இந்தியா ஏர்லைன்ஸ் உள்ளிட்ட பொதுத்துறைகளை விற்பனை செய்ததோடு ‘அக்னிபாதை’ என்ற திட்டத்தை கொண்டு வந்து இந்திய இளைஞர்களின் ஒட்டுமொத்த ராணுவ கனவையும் சிதைத்து விட்டது என்று பேசிய அவர், அதிமுகவும் பாமகவும் இணைந்து வாக்களித்து குடியுரிமை திருத்தச் சட்டம் அமலாகியுள்ளது.
இதன் மூலம் அந்த இரண்டு கட்சிகளும் பாஜக உடன் இணைந்து, இலங்கைத் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் துரோகம் செய்துள்ளது. ஆனால், அவர்கள் தங்களுக்கு தாங்களாகவே சிறுபான்மை மக்களின் காவலர்கள் என்று பட்டம் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்’’ எனவும் சாடினார்.