districts

மண்டவாடி தலித் மக்களுக்கு வீட்டடிமனை வழங்குக! தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தல்

திண்டுக்கல், ஜூன் 1- ஒட்டன்சத்திரம் மண்டவாடி தலித் மக்கள்  100 பேருக்கு தலா 3 சென்ட் வீட்டடி மனை வழங்க உணவுத்துறை துறை அமைச்சர் அர.சக்கரபாணி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள்ளது.  இதுகுறித்து முன்னணியின் மாநிலத்  தலைவர் டி.செல்லக்கண்ணு திண்டுக்கல் லில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு முழுவதும் உள்ள தலித் மக்களுக்கான பஞ்சமி நிலங்கள் ஆக்கிர மிக்கப்பட்டு உள்ளன. அந்த நிலங்கள் விற்கப்பட்டாலும், அதே சமூக மக்கள் பயன்பாட்டில் இருக்க வேண்டும் என்று அரசு  விதி கூறுகிறது. ஓட்டன்சத்திரம் அருகே யுள்ள மண்டவாடி கிராமத்தில் 7 ஏக்கர் 20 சென்ட் பஞ்சமி நிலம் உள்ளது. இந்த  நிலத்தை கண்டறிந்த தீண்டாமை ஒழிப்பு  முன்னணியின் தலைவர்கள் அந்த நிலத்தை அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த 7 பயனாளி களுக்கு வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மற்றும் கோட்டாட்சியரிடம் மனுக்  கொடுத்தோம். இந்நிலையில் வட்டாட்டசி யர் காலதாமதம் காரணமாக அந்த நிலத்தில் செப்டம்பர் 30 ஆம் தேதி தோழர் பி;.சீனி வாசராவ் நினைவு தினத்தன்று நேரடி இயக்க மாக உழவடை செய்தோம். இது தொடர்பாக தலைமை செயலகத்தில் உள்ள நில நிர்ணய அதிகாரியிடம் மனுக்கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் உணவு பாதுகாப்புத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி தலையீட்டில் வீட்டடிமனையாக பிரிக்கப்பட்டு அதனை தலித் மக்களுக்கு விநியோகிக்க நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இது  தொடர்பாக தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் தலைவர்கள் அமைச்சரை சந்தித்து 3 கிராமங்களைச் சேர்ந்த அருந்ததிய தலித்  மக்களுக்கு 100 பயனாளிகளுக்கு தலா 3  சென்ட் வீட்டடி மனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியதன் அடிப்படையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பயனாளி பட்டியலுக்கு முன்னுரிமை வழங்குவதாக உத்தரவாதம் அளித்துள்ளார. இதனை தீண்டாமை ஒழிப்பு முன்னணி வரவேற்கி றது. விரைவில் உண்மையான பயனாளி களுக்கு வீட்டடி மனை பட்டா வழங்க அரசு  முன்வர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். பேட்டி யின் போது மாவட்டத்தலைவர் டி.முத்துச் சாமி, மாவட்டச்செயலாளர் எம்.ஆர்.முத்துச்  சாமி, பொருளாளர் ஆர்.வனஜா, மாவட்ட துணைத்தலைவர் குருசாமி ஆகியோர் உட னிருந்தனர்.