districts

img

திண்டுக்கல்லில் காதல் திருமணம் செய்தவர்கள் சங்கமம்

திண்டுக்கல், பிப்.14- பிப்ரவரி 14 காதலர் தினத்தை முன்னிட்டு திண் டுக்கல்லில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக  காதலர் சங்கமம் நிகழ்ச்சி திங்களன்று நடை பெற்றது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாவட்டக்குழு அலுவலகத் தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் காதல் திரு மணம் செய்து  கொண்டவர் கள் கௌரவிக்கப்பட்டனர்.  மாதர் சங்கத்தின் மாவட்  டத் தலைவர் ஏ. சுமதி   நிகழ்ச்சிக்கு தலைமை  வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர் ஆர்.வனஜா வர வேற்றார். மாநிலத்தலைவர் எஸ்.வாலண்டினா,  மாநி லச் செயலாளர் ஜி. ராணி ஆகியோர் கலந்து கொண்டு காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதிகளை  பாராட்டி கௌரவித்து சிறப் புரையாற்றினர்.  சிபிஎம் மாவட்டச்செயலாளர் ஆர். சச்சிதானந்தம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணி மாவட்டச்செயலாளர் எம்.ஆர்.முத்துச்சாமி  ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். மாதர் சங்க மாவட்ட நிர்வாகி கள் பாப்பாத்தி,  பாண்டியம் மாள்,  வி.சுமதி, ஆர்.தங்க  மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;