சின்னாளபட்டி, ஜூன் 20- திண்டுக்கல் மாவட்டம் நிலக் கோட்டை ஒன்றியம் பிள்ளையார் நத்தத்தைச் சேர்ந்தவர் போது ராஜன். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிலக்கோட்டை ஒன்றிய செயலாளராக உள்ளார். இவரது மகன் கவின் பட்டிவீரன்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி விடுமுறைக்கு கொடைக் கானலில் உள்ள பெரியம்மா வீட்டிற்கு சென்றார். உற வினருடன் இருசக்கர வாகனத்தில் காமக்காப்பட்டி அருகே வரும் போது திறந்திருந்த காரின் மீது மோதியதில் காய மடைந்து வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் உயிரிழந்தார். கவினின் கண்களை பெற்றோரே முன்வந்து மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு தானமாக வழங்கினர். அரசு மருத்துவ மனையும் உலக அரிமா சங்கமும் பெற்றோரை பாராட்டி சான்றிதழ் வழங்கி னர்.