திண்டுக்கல், பிப்.27- ஆன் லைன் சாதிச்சான்றிதழ் பிரச்சனை தொடர்பாக இந்திய மாணவர் சங்கம் தலைமையில் பழங்குடி சமூக மாணவர்கள் திண்டுக்கல் ஆட்சியர் அலுவல கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி னர். பின்னர் அமைப்பின் மாவட் டத்தலைவர் முகேஷ், மாவட்டச் செயலாளர் ஜீ.தீபக்ராஜ். வாலிபர் சங்க மாவட்டச்செயலாளர் கே.ஆர்.பாலாஜி ஆகியோர் ஆட்சியரிடம் மனு அளித்தனர். மனுவில், “ திண்டுக்கல் மாவட் டம் நிலக்கோட்டை பேரூராட்சி 11-ஆவது வார்டு புதுப்பட்டியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு ஆதி திரா விடர்-பழங்குடி நலத்துறை மூலம் காட்டு நாயக்கர் சான்றிதழ் வழங் கப்பட்டுள்ளது. திண்டுக்கல் கோட் டாட்சியர் மூலம் வழங்கப்பட்ட சான்றிதழை ஆதாரமாகக் கொண்டு கல்வி உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்துள்ளனர். சென்ற கல்வி ஆண்டு வரை பழைய அட்டை மூலமே கல்வி உதவித் தொகை பெற்று வந்தனர். இந் தாண்டு அட்டை செல்லாது; ஆன் லைன் மூலம் தமிழக அரசால் வழங்கப்படும் பழங்குடியினர் சான்றிதழ் மட்டுமே ஏற்கப்படும் என்று கல்வி நிறுவனங்கள் அறி வித்துள்ளன. புதியதாகப் பழங்குடி யின சாதிச் . சான்றிதழுக்கு ஆன் லைனில் பதிவேற்றம் செய்தால் சர்வர் பிரச்சனை காரணமாக பணி கள் பூர்த்தியடைவில்லை. சர்வர் பிரச்சனையால் இந்தக் கல்வி யாண்டிற்கான கல்வி உதவித் தொகை கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது. அந்த மாணவ- மாணவிகளின் கல்வி தடைப்பட வும் வாய்ப்புள்ளது. காட்டு நாயக்கன் பழங்குடியின மாணவர்களின் அச்சத்தைப் போக் கும் வகையில் பழைய முறைப்படி சான்றிதழை ஏற்றுக்கொண்டு கல்வி உதவித்தொகை கிடைக்க வும், கல்வியைத் தொடரவும் நட வடிக்கை எடுக்க வேண்டுமென” தெரிவித்துள்ளனர்.
விருதுநகர்
விருதுநகர் ஆட்சியரிடம் மாண வர் சங்க மாநிலக்குழு உறுப்பி னர் விமலா, மாவட்டத் தலைவர் பால்பாண்டி, மாவட்ட செயலாளர் ஜோதீஸ்வரன் ஆகியோர் அளித் துள்ள மனுவில், “ ஆதி திராவிடர், மதம் மாறிய கிறிஸ்தவ ஆதி திரா விடர் மாணவர்களுக்கு ஒன்றிய அரசு, உயர் கல்வி படிப்பதற்கு கல்வி உதவித் தொகை திட்டம், மாநில அரசின் சிறப்பு உயர் கல்வி திட்டம் ஏழை, எளிய மாணவர்கள் கல்வி கற்க உதவியாக இருந்தது. இந்தத் திட்டம் 2022-23 கல்வி ஆண்டு வரை செயல்பாட்டில் உள்ளது. ஆனால், மாநிலம் முழுவதும் சுமார் 74605 மாணவ மாணவி கள் மட்டுமே இக்கல்வி உதவித் தொகை கோரி விண்ணப்பித்துள்ள னர். இது வெறும் 28 சதவீதம் மட்டுமே. மீதமுள்ள சுமார் 3,88,652 மாணவர்கள் கல்வி உதவித் தொகை கோரி விண்ணப்பிக்க முடி யவில்லை. எனவே, கல்வி உதவித் தொகை கோரி விண்ணப்பிக்கும் கால அளவை நீட்டிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் அமைப் பின் மத்தியக்குழு உறுப்பினர் கா.பிருந்தா, மாநகர் மாவட்டத் தலைவர் டேவிட், புறநகர் மாவட் டத் தலைவர் க. ராகுல் உள்ளிட்ட மாணவர் சங்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.