districts

img

மின்கம்பிகளில் படரும் மரக்கிளைகள், கொடிகள்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ஒன்றியம் லிங்கவாடியில் இருந்து பரளி செல்லும் சாலையில்  மின்சார கம்பிகளில் அருகில் உள்ள மரக்கிளைகள் மற்றும் கொடிகள் படர்ந்து செல்வதால் மின்சார கசிவு ஏற்பட அதிகவாய்ப்புள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை மின்வாரியத்திடம் தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த மின்சார கம்பி மீது பூசணிக்காய் காய்த்து தொங்கிக்கொண்டு இருக்கிறது. எதுவும் அசம்பாவிதம் நிகழும் முன்பு மின்வாரிய அதிகாரிகள் இதனை சீர்படுத்த வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.