districts

img

மேதின விழா கொடியேற்றம்- பொதுக்கூட்டம்

திண்டுக்கல், மே 2- திண்டுக்கலில் சிபிஎம் நகர்க்குழு அலுவலகம், மாவட்டக்குழு அலுவலகம் உட்பட பல மையங்களில் மே தின கொடியேற்று விழா, பொ துக்கூட்டம் நடைபெற்றது.  இதில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி, மாநிலக்குழு உறுப்பினர் என்.பாண்டி, மாவட்டச் செயலாளர் ஆர்.சச்சிதானந்தம், சிபிஎம் மாமன்ற உறுப்பினர்கள் கணேசன், மாரியம்மாள், ஜோதிபாசு, ஆகியோர் கலந்துகொண்டனர். 

மதுரை புறநகர்
மதுரை புறநகர் புது விளாங்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் செ. கண்ணன் தலைமை வகித் தார். சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் சிஐடியு மாநில நிர்வாகியுமான டில்லிபாபு பேசினார்.  இதில் சிஐடியு மாவட்டப் பொருளாளர் ஜி.கெளரி, விவ சாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.பி.இளங்கோ வன், மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், மாதர் சங்க  மாநிலச் செயலாளர் எஸ்.கே. பொன்னுத்தாய், ஏஐடியுசி மாவட்டத் தலைவர் பா.காளி தாஸ், உட்பட பலர் கலந்து கொண்டனர். சேடபட்டி ஒன்றியத்தில் கட்சியின் புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன் கொடியேற்றினார்.

அலங்காநல்லூர் 
அலங்காநல்லூர் கூட்டு றவு நேஷனல் சர்க்கரை ஆலை ஊழியர்கள் சங்கம் (சிஐடியு) சார்பில் சர்க்கரை ஆலை முன்பு சர்க்கரை சம் மேளன (சிஐடியு)) மாநிலப் பொதுச் செயலாளர் உதய குமார் சிஐடியு கொடியை ஏற்றினார்.  இதில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் மாநிலத் தலைவர் என்.பழனிச்சாமி, மாவட்டச் செயலாளர் கரு. கதிரேசன், சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர் செ. ஆஞ்சி ஆலை செயலாளர் கஸ்பர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

திருவில்லிபுத்தூர் 
வத்திராயிருப்பு ஒன்றி யம் திருவில்லிபுத்தூர் நகர் ஒன்றியம் ராஜபாளையம் நகர் கிழக்கு-மேற்கு ஒன்றி யங்கள் உள்ளிட்ட பகுதிக ளில் 54 இடங்களில் சிபிஎம் சிஐடியு சார்பில் கொடிகள் ஏற்றப்பட்டன.  கட்சியின் மாவட்டச் செய லாளர் கே.அர்ஜூனன், சட்ட மன்ற முன்னாள் உறுப்பின ரும், மாநில செயற்குழு உறுப் பினருமான கே.பாலபாரதி, மாநிலக் குழு உறுப்பினர் எம். மகாலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில், சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் ஜி.கணே சன், மாநிலக்குழு உறுப்பினர் எம்.திருமலை, ஏஐடியூசி மாவட்ட அமைப்புச் செயலா ளர் வி.ரவி, சிபிஐ மாவட்டச் செயலாளர் லிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.