திண்டுக்கல், மார்ச் 27- காசி தமிழ் சங்கமம் என்று கூறிக்கொண்டு சென்னையில் ஐ.ஐ.டி மாணவர்களை காசிக்கு அழைத்துச்சென்று ஆர்.எஸ்.எஸ். பயிற்சி அளித்த சம்பவம் தமிழக மக்களி டையே பெரும் கோபத்தை கிளறிவிட்டது. தற்போது சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் என்ற பெயரில் திண்டுக்கல் உள்ளிட்ட நகரங்களில் வாழும் சௌராஷ்டிரா மக்களை குஜ ராத்துக்கு அழைத்துச் செல்ல உள்ளனர். அழைப்பிதழில் ‘அஸ்கிதெங்கோ நமஸ்கார்’ என்று ஆரம்பித்து ‘அஸ்கி தெனுன் அவோ’ என்று சௌராஷ்டிரா மொழி யை தமிழில் எழுதி அம்மக்களை அழைக்கி றார்கள். சௌராஷ்டிரா சமூக மக்களின் பூர்வீக இடமான சௌராஷ்டிரத்திற்கு அழைத் துச்செல்லும் ஒரு முன்னோட்ட நிகழ்ச்சி சனிக் கிழமையன்று திண்டுக்கல் பாரதிபுரத்தில் உள்ள சௌராஷ்டிரா சமூகத்திற்கு சொந்தமான நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் குஜராத் அரசின் பழங்குடி மக்கள் வளர்ச்சித்துறை மற்றும் வயது வந்தோர் கல்வித்திட்டத்தின் அமைச் சர் முனைவர் குபேர்பாய் டினோர், ஐ.ஏ.எஸ். அதிகாரி முரளிகிருஷ்ணா ஆகியோர் கலந்து கொண்டனர். இதே போல் தமிழ்நாடு முழு வதும் குஜராத்திலிருந்து 8 அமைச்சர்கள் சென்னை, மதுரை, திண்டுக்கல், பரமக்குடி, சேலம், கும்பகோணம், தஞ்சை, நெல்லை, திருச்சி ஆகிய நகரங்களில் பங்கேற்றுள் ளார்கள்.
திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து 3 ஆயிரம் பேரை குஜராத்துக்கு அழைத்துச் செல்ல உள்ளனர். இலவசமாகவே 10 நாட்கள் குஜராத்தில் தங்க வைத்து மதவாதப் பாடம் நடத்த உள்ளனர். அவர்களுக்கு போக்கு வரத்து, உணவு எல்லாம் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு வர விரும்புவோர் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்படுகிறார்கள். கடந்த 5 நாட்களில் மட்டும் 20 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ள னர். இரண்டு மாநிலத்தில் உள்ள மக்களை இணைக்கும் கலாச்சார விழா என்ற பெய ரில் இது நடக்கிறது. இதற்காக பாஜக சொல் லுகிற கதை என்னவென்றால், 1300 ஆண்டு களுக்கு முன்பு கஜினி முகமது படையெ டுப்பின் போதும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அலாவுதீன் கில்ஜி காலத்தில் நடை பெற்ற படையெடுப்பின் போதும் சௌராஷ் டிரா மக்கள் இந்தியா முழுவதும் புலம் பெயர்ந்து வந்ததாக சொல்கிறார்கள். இஸ்லாமிய எதிர்ப்பு உணர்வை வளர்க்க இது போன்ற கட்டுக்கதைகளை பாஜக - ஆர்எஸ்எஸ். அமைப்பினர் சௌராஷ்டிரா மக்கள் மத்தியில் சொல்லி இந்த நிகழ்ச்சிக்கு ஆட்களை திரட்டுகிறார்கள். தமிழ்நாட்டில் பிற சமூக மக்களுடன் ஒற்றுமையாக உள்ள சௌராஷ்டிரா மக்கள் மத்தியில் காவி அரசியலை முன் வைத்து பிளவுபடுத்தும் இந்த அணி திரட்ட லுக்கு எதிராக அந்த சமூக மக்களில் பலர் எதிர்த்துப் போராட்டம் நடத்த தயாராகி னர். பின்னர் அந்த முயற்சியை கை விட்டுள்ளனர். சௌராஷ்டிரா சபா மூலமாக அரசு நிகழ்ச்சி என்ற பெயரில் ஒரே பாரதம், உன்னத பாரதம் என்று சொல்லியும், ‘லீலீ குஜராத்’ என்ற தாய் நிலத்திற்கு செல்ல வேண்டும் என்றும் சோமநாதர் ஆலயம், துவாரகா, படேல் சிலை, கீர் வனப்பகுதி ஆகியவற்றை காண்பிப்பதாக ஆசை காட்டி அம்மக்களை காவிமயமாக்கும் நோக்கத்துடன் திரட்டு கின்றனர். குஜராத்தில் ஏப்ரல் 17ம் தேதி முதல் 26ம் தேதி வரை 10 நாட்கள் இந்தச் சுற்றுலா நடைபெறுகிறது. பாஜக திட்டமிட்டு சாதிய, இனரீதியாக மக்களிடையே ஊடுருவி மதவெறியை தூண்டுவதற்கு தொடர் முயற்சி எடுத்து வரும் சூழலில், இன ரீதியாக சௌராஷ்டிரா மக்களை அணிதிரட்டும் இந்த முயற்சி நடக்கிறது. - இலமு