திண்டுக்கல், பிப்.25- பாரதிய ஜனதா கட்சியை தமிழ்நாட்டி லிருந்து துடைத்தெறிவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சூளுரைத்தார்.
திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில அளவிலான பயிற்சிப் பட்டறையையொட்டி, தேர்தல் பிரச்சார பரப்புரையை அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் பிரகாஷ்காரத் துவக்கி வைத்தார். இப்பொதுக்கூட்டத் தில் உரையாற்றிய கே.பாலகிருஷ்ணன் மேற்கண்டவாறு கூறினார்.
அவரது உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை, பாஜகவை தமிழ்நாட் டில் தேர்தலில் தோற்கடிப்பது மட்டு மல்ல; தமிழக மண்ணிலிருந்தே பாஜக வை துடைத்தெறிய வேண்டும் என்பது தான் இலக்கு.
ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும்...
நடப்பு தேர்தலில் மட்டுமல்ல, வேறு எந்த தேர்தலிலும் தமிழ்நாட்டில் பாஜக கால் பதிக்காமல் துடைத்தெறிவோம் என்று சூளுரைக்கிறோம். பாஜகவின் ஆணிவேரையே தகர்க்கக் கூடிய பணி யினை செய்ய வேண்டும் என உறுதி ஏற்றுள்ளோம்.
தமிழ்நாட்டில் ஏறத்தாழ 33 ஆயிரம் வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்த 33 ஆயிரம் வாக்குச்சாவடிகளிலும் எங்க ளது ஊழியர்கள் இரவு பகலாகச் சென்று அந்த பகுதி மக்களைச் சந்தித்து, பொறுப் பாளர்களை தீர்மானித்து தேர்தல் பணி யாற்ற உள்ளார்கள்.
‘நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’
சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு திரைப்படம் வந்தது. ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணவில்லை’ என்று அந்த படத்திற்கு பெயர். அதே போல இந்திய வரலாற்றை புரட்டிப் பார்த்தால் இடை யில் வந்துள்ள பாஜகவின் இந்த 10 ஆண்டுகள் காணாமல் போன ஆண்டுக ளாகத் தான் இருக்கும். பாஜக ஆட்சி நடந்திருக்கிறதே தவிர, 10 ஆண்டுகளில் என்ன செய்தார்கள்? விவசாயிகளின் பிரச்சனைகளை தீர்த்திருந்தால் எதற் காக தில்லியில் விவசாயிகள் போராடப் போகிறார்கள்? கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னால் நீங்கள் கொடுத்த வாக்குறுதி களை இப்போதாவது நிறைவேற்றுங் கள் என்று கேட்கிறார்கள்.
விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்கினீர்களா?
பிரதமர் மோடி அவர்களே, குறைந்த பட்ச ஆதார விலையை நிறைவேற்றுகிற சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறை வேற்ற வேண்டியது தானே? 143 எம்.பி.க்களை எல்லாம் ஒரே நாளில் சஸ்பெண்ட் செய்துவிட்டு 19 மசோதாக் களை அவசர அவசரமாக விவாதமில்லா மல் நிறைவேற்றினீர்கள். விவசாயி களின் கோரிக்கையை சட்டமாக நிறை வேற்றினால் என்ன? விவசாயிகள் வரு மானத்தை இரட்டிப்பாக்குவோம் என்று சொன்னீர்கள். 2 கோடி பேருக்கு வேலை கொடுப்போம் என்றீர்கள். எவ்வளவு வாக்குறுதிகளை நீங்கள் கொடுத்தீர் கள்? அதில் ஏதாவது ஒன்றை நிறை வேற்றினீர்களா?
ஓட்டுக்காக முன்னிறுத்தப்படும் ராமர்
விலைவாசியை கட்டுப்படுத்து வோம் என்று சொன்னீர்கள். உங்கள் ஆட்சியில் சமையல் எரிவாயு விலை என்ன? டீசல் பெட்ரோல், மண்ணெண் ணெய் விலை என்ன? விலைவாசியெல் லாம் ஏறி தாண்டவம் ஆடிக்கொண்டி ருக்கிறது. இதையெல்லாம் கட்டுப் படுத்த முடியாதவர் மோடி. அதிலிருந்து மக்களைத் திசை திருப்பித் தான் அவர் ராமரைக் கொண்டு வந்திருக்கிறார்.
மோடி முகத்தை டி.வி.யில் பார்த் தாலே குழந்தைகள் அலறுகின்றனர். தாய்மார்களின் வயிறு எரிகிறது. அவர் ஓட்டுக்கேட்டால் தமிழ்நாட்டு மக்கள் போடுவார்களா? அமித்ஷா ஓட்டுக்கேட் டால், நிர்மலா சீதாராமன் ஓட்டுக்கேட் டால் போடுவார்களா? அதனால்தான் ராமரை முன்னிறுத்துகிறார்கள்.
பாஜகவிற்கு மரண அடி காத்திருக்கிறது
பாஜக நாடு முழுவதும் தோல்வி யடைவது என்பது உறுதியாகி இருக்கி றது. நீங்கள் எதிர்க்கட்சிகளை எவ்வ ளவு மிரட்டினாலும் சரி எல்லாவற்றை யும் கடந்து இந்திய மக்கள் இறுதியாக பாஜக தலையில் மரண அடி கொடுக்கப் போகிறார்கள்.
தமிழ்நாட்டில் பாஜக தலைமை யிலான தேசிய ஜனநாயக கூட்டணி சிதறு தேங்காய் போல சிதறிக்கிடக்கிறது. நாங் கள் கதவை திறந்து வைத்திருக்கிறோம் என்று அண்ணாமலையும், நாங்கள் ஜன்னலை திறந்து வைத்திருக்கிறோம் என்று எடப்பாடியும் சொன்னாலும் கூட எவரும் உங்கள் கூட்டணியை திரும்பிப் பார்க்கவில்லை. யாராவது அதிமுக பக் கம் போகிறார்களா? யாராவது பாஜக பக்கம் போகிறார்களா? நீங்களும் தூண் டில் போட்டு, வலை போட்டு பிடிக்க முயற்சிக்கிறீர்கள். ஆனால் தமிழ்நாட் டில் யாரும் உங்களைக் கண்டுகொள்வ தில்லை. நிலைமை இப்படி இருக்க ‘இந் தியா கூட்டணி’ பற்றிப் பேச உங்களுக்கு என்ன அருகதை உள்ளது..?
39 தொகுதியும் வெற்றி என்பது ‘இந்தியா’ அணிக்கு உறுதியாகிவிட்டது. அதிமுக, பாஜக ஆகிய இரண்டு கட்சி களும் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்ட போதே ஒரே ஒரு சீட்டில் தான் வெற்றி பெற முடிந்தது. இப்போது பாஜகவும், அதிமுகவும் பிரிந்து இருக் கின்றன. எப்படி வெற்றி பெறுவீர்கள்? இந்த நிலையில் பிரதமர் மோடி தமிழ் நாட்டுக்கு திரும்பத் திரும்ப வருகிறார். நாளைக்கும் வருகிறார். திருப்பூரில் பேசு கிறார், கோவையில் பேசுகிறார். மதுரை யில் பேசுகிறார். அவர் பேசப் பேச தமிழ்நாட்டு மக்கள் இன்னும் வெகுண்டு எழுவார்களே தவிர மோடிக்கு ஆத ரவாக யாரும் வாக்களிக்க மாட்டார்கள்.
சல்லிக்காசு கூட தராத மோடி அரசு
சென்னை மற்றும் தென் மாவட்டங்க ளில் ஏற்பட்ட வரலாறு காணாத மழை வெள்ளத்தால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள் ளது. இதுவரை ஒன்றிய அரசு ஒரு ரூபா யாவது தமிழ்நாட்டுக்கு நிவாரணம் கொடுத்திருக்கிறீர்களா? இவ்வளவு பெரிய பேரிடர் ஏற்படுகிற போது அந்த மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மோடி அரசாங்கத்திற்கு கிடை யாதா? இது வரை ஒரு சல்லிக்காசு கூட கொடுக்காத மோடிக்கு தகுந்த பாடம் புகட்டுவது எப்போது என்று தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஆளுநர் பதவிக்காக அலையும் அண்ணாமலை
அண்ணாமலை நடைபயணம் நடந்து என்ன செய்யப்போகிறார்? பாஜகவில் தலைவராக வந்தால் அவர்களுக்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது. ஏற்கனவே இல. கணேசன் தலைவராக இருந்தார். அவர் ஒரு மாநிலத்திற்கு கவர்ன ராக போய்விட்டார். பிறகு சி.பி.ராதாகிருஷ்ணன் தலை வராக இருந்தார். அவர் ஒரு மாநிலத்திற்கு கவர்னராக போய்விட்டார். பிறகு தமி ழிசை சௌந்தரராஜன் தலை வராக இருந்தார். அவர் தெலுங்கானா, பாண்டிச் சேரி என்று பம்பர் பரிசு போல 2 மாநிலத்திற்கு கவர்னராக ஆனார். நமக்கும் ஏதாவது ஒரு ஆளுநர் பதவி ஆறுதல் பரிசாக கிடைக்காதா என்று தான் அண்ணாமலை இந்த நடைபயணத்தை நடத்துகி றாரே தவிர வேறு ஒன்று மில்லை.
அதிமுக இரட்டை வேடம்
அதிமுகவினர், பாஜக வை எதிர்ப்பதாக கூறுகிறார் கள். இவ்வளவு நாள் நீங்கள் பாஜகவை தோளில் தூக்கிக் கொண்டு அலையோ அலை என்று அலைந்தீர்கள். காவடி தூக்குவது போல பாஜக வைத் தூக்கி உங்கள் தோள் காப்பு காய்த்துவிட்டது. இப் போது பாஜகவை எதிர்க்கி றோம் என்கிறீர்கள்.
இங்கே எதிர்க்கிற நீங்கள் நாடாளுமன்றத்திற்கு போ னால் ஏன் சும்மா இருக்கிறீர் கள்? அங்கும் எதிர்க்க வேண் டியது தானே. உங்கள் நாடா ளுமன்ற உறுப்பினர் ஏன் அமைதியாக உட்கார்ந்து இருக்கிறார்? இந்த இரட்டை வேடத்தை யார் நம்புவார்?
சிறுபான்மை மக்களை எடப்பாடி காப்பாற்றுவாரா?
சிறுபான்மை மக்களுக்கு இந்த 5 வருடம் அதிமுகவினர் என்ன அநியாயம் செய்தீர் கள்! பாஜக கொண்டு வந்த மிகக் கொடூரமான சட்டங் களை எல்லாம் நீங்கள் ஆத ரிக்கவில்லையா? குடியுரி மைச் சட்டம் நாடாளுமன்றத் தில் கொண்டு வந்த போது மாநிலங்களவையில் உள்ள 8 அதிமுக எம்.பி.க்கள் எதிர் த்து வாக்களித்திருந்தால் இந்த சட்டமே வந்திருக்காது. ஆனால் அதிமுக ஆதரித்து வாக்களித்து. அந்த சட் டத்தை ஆதரித்து வாக்க ளித்தது மட்டுமல்ல, இந்த குடியுரிமை சட்டம் அமலா னால் இந்தியாவில் யாருக் கும் எந்த பாதிப்பும் இருக் காது என்று சொன்னீர் களே! இப்போது குடியுரிமை சட்டத்தை அமலாக்கப் போ கிறார்கள்; அதிமுகவினர் என்ன செய்யப் போகிறீர் கள்? சிறுபான்மை மக்களின் குடியுரிமையை பறித்து அவர்களை அனாதைகளாக அறிவிக்கப் போகிறார்கள்? என்ன செய்ய போகிறீர்கள்; எடப்பாடியால் காப்பாற்ற முடியுமா?
தொடர்ந்து தமிழகத்தை வஞ்சிக்கும் மோடி
எனவே இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் தமிழ் நாட்டில் திமுக தலைமை யிலே ஒரு மகத்தான கூட்டணி செயல்பட்டுக்கொண்டிருக் கிறது. திமுக அரசுக்கு ஒன்றிய அரசு உரிய நிதியை கொடுக் காமல், பங்கீட்டு தொகை யை கொடுக்காமல், வெள்ள நிவாரணத்தைக் கொடுக்கா மல் வஞ்சிக்கிறது.
அதை எதிர்த்து திமுக அரசு உறுதியோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எனவே, முற்றிலும் மக்கள் விரோத - தேசவிரோத - ஆர்.எஸ்.எஸ் பாஜகவை துடைத்தெறிகிற மகத்தான பணியை நாம் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கட்சியின் திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் ஆர்.சச்சிதானந்தம் தலைமை வகித்தார்.
அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் பிர காஷ்காரத், மாநில செயற் குழு உறுப்பினர்கள் மதுக் கூர் இராமலிங்கம், என். பாண்டி, எஸ்.கண்ணன், நக ரச் செயலாளர் ஏ.அரபுமுக மது, ஒன்றியச் செயலாளர் சரத்குமார் ஆகியோர் பேசினர். (ந.நி)