திண்டுக்கல், மார்ச் 14- திண்டுக்கல் பத்திரப் பதிவு அலுவல கத்தில் தேய்ந்து போன சீல் குறித்து புகார் எழுந்துள்ளது. பத்திரப் பதிவு அலுவலகங்களில் பதி யப்படும் பத்திரங்களில் அரசு சீல் வைக்கப் படுவதுண்டு. இந்த சீல் பித்தளையில் செய் யப்பட்டது. தற்போது தேய்மானம் ஆகி விட்டதால் அச்சடிக்கும் போது சரியாக பதியாமல் விடப்படுகிறது. இதனால், பல ஆண்டுகள் பாதுகாக்கப் பட வேண்டிய பத்திரம் பாதிக்கப்படுகிறது. எனவே, பத்திரங்கள் பதியப்படும் அரசு சீல் புதிதாக செய்யப்பட வேண்டும் அல்லது சரி செய்ய வேண்டும் என பத்திர எழுத்தர் கண்ணன் ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார்.