சின்னாளபட்டி, ஜூன் 7- தமிழ்நாடு ஆசிரி யர் கல்வியியல் பல்கலைக்கழ கத்தின் மேனாள் துணைவேந்தரும் அண்ணாமலைப் பல்கலைக்கழ கத்தின் முன்னாள் பதிவாளருமாகிய பேராசிரியர் ந.பஞ்ச நதம் காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்த ராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்துப் பல்கலைக்கழகச் செய்திக் குறிப்பில், ஒன்றிய கல்வி அமைச்சத்தின் உத்தர வின்படி, காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் முனைவர் கேஎம்.அண்ணாமலை, பேராசிரியர் ந.பஞ்சநதம் அவா்களைப் புதிய துணை வேந்தராக நியமனம் செய்துள்ளார்.
இதன டிப்படையில், பேராசிரியர் ந.பஞ்சநதம் காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்க லைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக 02.06.2024 அன்று பொறுப்பேற்றுக் கொண்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.