districts

img

இலவச கட்டாய கல்விச் சட்டம் சேரன் பள்ளியில் சேர  30 மாணவர்கள் தேர்வு

 சின்னாளபட்டி, ஜூன் 1- திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி சேரன் வித்யா லயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசு அறி வித்துள்ள அனைவருக்கும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் குழந்தைகளை சேர்ப்பதற்காக மொத்தம் 216 பேர்  விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 81 பேர் தகுதி யானவர்களாக தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் குழந்  தைகளை சேர்ப்பதற்காக குலுக்கல் முறையில் தேர்வு  நடைபெற்றது. சேரன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பெற்றோர்கள் பங்கேற்றனர். வட்டார கல்வி அலுவலர் ஆண்டவர் தலை மையில் சேரன் பள்ளி முதல்வர் திலகம் முன்னிலையில் குலுக்கல் முறையில் தேர்வு நடைபெற்றது. இதில் 30 பேர்  கட்டாய கல்வி சட்டம் மூலம் பள்ளியில் சேர்வதற்கு தேர்வு  செய்யப்பட்டனர். தேர்வு பணியில் உதவி தலைமையா சிரியை வெண்ணிலா, பள்ளி மேலாளர் ஓ.பி.பாரதி ராஜா ஆகியோர் ஈடுபட்டனர். எவ்வித சிரமுமின்றி தங்க ளுக்கு பள்ளியில் சேருவதற்கு அனுமதி வழங்கிய சேரன்  பள்ளி நிர்வாகத்தை பெற்றோர்கள் பாராட்டினர்.