districts

img

பட்டியலின மக்களின் நிலத்தை அபகரித்து பொய் வழக்கு: காவல்துறையை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்,ஜூன் 10-  திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஒன்றியம் அம்பிளிக்கையில் காப்பி லியபட்டியில் பட்டியலின மக்களின் நிலத்தை அப கரித்து பொய் வழக்கு போட்ட காவல்துறையைக் கண்டித்து ஜூன் 10 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒட்டன்சத்திரம் ஒன்றியம் காப்பிலியபட்டியில் பட்டிய லின வகுப்பைச் சேர்ந்த ஆறு முகம், சுப்பிரமணி, மாரி முத்து ஆகியோருக்கு சொந்தமான பட்டா நிலத்தில் ஊராட்சி மன்ற தலைவர் கணவர் ராமசாமி, காவல் சார்பு ஆய்வாளர் சவட முத்து, வருவாய் துறை  சேர்ந்து பாதை அமைத்துள் ளனர். இதை தட்டிக் கேட்ட தற்கு சுப்பிரமணி, பஞ்ச வர்ணம், காளிமுத்து ஆகி யோர் மீது பொய் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். பாதிக் கப்பட்ட குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும், பொய் வழக்கு பதிவு செய்த சார்பு ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், ஊராட்சி மன்ற  தலைவர் கணவர் ராமசாமி, சார்பு ஆய்வாளர் சவட முத்து மீது வழக்கு பதிவு செய்திட கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஒன்றிய செயலாளர் எஸ். சிவமணி தலைமை வகித்தார். மாவட்ட செயற் குழு உறுப்பினர் கே. அருள் செல்வன் கண்டன உரை யாற்றினார். முன்னாள் ஒன்றிய செயலாளர் எம். கரு ணாகரன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.