திண்டுக்கல், ஜுன் 6- திண்டுக்கல் தொகுதி மக்க ளவை உறுப்பினராக வெற்றிபெற் றுள்ள சிபிஎம் வேட்பாளர் ஆர்.சச்சி தானந்தத்தின் சொந்த ஊரான கட்ட சின்னாம்பட்டி மற்றும் ரெட்டி யார்சத்திரத்தில் உற்சாகமான வர வேற்பு அளிக்கப்பட்டது. இதனால் கட்டசின்னாம்பட்டி விழாக்கோலம் பூண்டது.
ெட்டியார்சத்திரம் பகுதியில் இரு நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் திரண்டு வந்து உற்சாகமான வரவேற்பு அளித்தனர். சொந்த ஊரான கட்ட சின்னாம்பட்டியிலும் மேளதாள ஆட்டம்பாட்டத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரது மனைவி கவிதா மற்றும் மகள்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பின்னர் ஊருக் குள் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். கிராம மக்கள் திரண்டு நின்று வரவேற்றனர். இந்நிகழ்வில் சிபிஎம் ரெட்டி யார்சத்திரம் ஒன்றியச்செயலாளர் கே.எஸ்.சக்திவேல், தமிழ்நாடு விவ சாயிகள் சங்க ஒன்றியச்செயலா ளர் தயாளன் மற்றும் கட்சியின் முன் னணி தலைவர்கள், திமுக, காங்கி ரஸ், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி யினர் உள்ளிட்ட கூட்டணி கட்சியின் தலைவர்கள் பங்கேற்றனர்.