திண்டுக்கல், டிச. 12 - அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு காவல்துறையினருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.
திண்டுக்கல்லைச் சேர்ந்த அரசு மருத்துவர் டி. சுரேஷ் பாபுவை, அம லாக்கப் பிரிவு அதிகாரி அங்கித் திவாரி மிரட்டி ரூ. 20 லட்சம் லஞ்சமாக கேட்டு பெற்றபோது கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
திவாரியின் நீதிமன்ற காவல் நாட்கள் முடிவடைந்த நிலையில், திண்டுக்கல் தலை மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அங்கித் திவாரியை காவலில் எடுத்து விசாரிக்க, டிசம்பர் 8-ஆம் தேதி தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் அனுமதி வழங்குமாறு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கறிஞர் அனுராதா கோரிக்கை விடுத்தார். இதற்கு அங்கித் திவாரியின் வழக்கறிஞர் செல்வம் எதிர்ப்பு தெரி வித்தார்.
எனினும், அங்கித் திவாரியை லஞ்ச ஒழிப்புத்துறையினர் காவலில் வைத்து விசாரிக்க டிசம்பர் 12 முதல் டிசம்பர் 14 மாலை 5 மணி வரை அனுமதி வழங்கி நீதிபதி மோகனா உத்தரவிட்டார். இதை யடுத்து, அமலாக்கத்துறை அதிகாரி அங்கீத் திவாரியை, லஞ்ச ஊழல் ஒழிப்பு காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.