சின்னாளபட்டி, ஜூன் 19- திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டி அருகே சிறுமலை அடிவாரத்தில் மாவூர்அணை உள்ளது இந்த அணை கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேல் தூர்வாரப்படாத தால் மணல் மற்றும் மண்மேடுகள் நிறைந்து ஓரிருநாள் மழைக்கே நிரம்பி சேரும் சகதி நிறைந்த குட்டைபோல் காட்சியளிக்கிறது கடந்த மூன்று நாட்களாக தொடர் கன மழை காரணமாக அணை முழு கொள்ளவை எட்டியுள்ளது. வரும் நீரை அப்படியே வெளியேற்றி வருகின்றனர் இத னால் வாய்க்காலில் செல்லும் நீரை கண்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஆபத்துக்களை உணராமல் அணை யின் உயரமான ஷட்டர்கள் பகுதியில் ஏறி நின்று மழை நீரில் அடித்து வரப்பட்ட மரம் செடி கொடிகள் கனிமண்கள் நிறைந்த நீர் வெளியேறும் சட்டர் திட்டு பகுதியில் குளித்து விளையாடி வருகின்றனர் இது நீர் வெளியேறும் பகுதி என்பதால் நீரின் வேகத்தில் அடித்து செல்லவும் வாய்ப்பு இருக்கிறது. இந்த அணையில் ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மாண வர்கள் முதல் பெரியோர்கள் வரை என சராசரியாக இரண்டு பேராவது இறந்து வருகின்றனர் சமீப ஆண்டு களாக சேற்றில் சிக்கி நீரில் மூழ்கி பத்துக்கும் மேற்பட்ட வர்கள் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது இந்த மாவூர் அணையில் பொதுப்பணித் துறையினர் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு குளிப்பதை தடுக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தினர்.