districts

img

அக்னிபாதை திட்டத்தைக் கண்டித்து மறியல்

திண்டுக்கல்/இராமநாதபுரம், ஜூன் 22- பாஜக அரசு கொண்டு வந்துள்ள அக்னிபாதை திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி திண்டுக்கல்லில் மாணவ சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சமீபத்தில் ஒன்றிய பாஜக அரசு ராணு வத்தில் வேலை வாய்ப்பு சம்பந்தமாக அக்னிபாதை என்ற திட்டத்தை அறி வித்துள்ளது. இத்திட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கமும் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழு வதும் போராட்டங்கள் நடத்த அறை கூவல் விடுத்துள்ளனர்.  இதனையடுத்து திண்டுக்கல் ரயில்  நிலையத்தில் முன்பு இந்திய மாணவர் சங்கம் சார்பில் புதனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் முகேஷ் தலைமை வகித்தார். ஆர்ப் பாட்டத்தில் அக்னிபாதை சட்டத்தை ரத்து செய்யக் கோரி பதாகைகளை ஏந்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இராமநாதபுரம் ராணுவத்திற்கு ஒப்பந்த அடிப்படை யில் ஆள் சேர்க்கும் ஒன்றிய பாஜக அர சின் அக்னிபாதை திட்டத்தை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் இராமநாதபுரம் ரயில் நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது. மறியலில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் வசந்த் சுர் ஜித், மாவட்ட நிர்வாகிகள் சுரேந்தர் உள்  ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். 

தேனி
தேனியில் ரயில் மறியல் போராட்டத்  தில் மாவட்டத் தலைவர் நாகராஜ், மாவட்டச் செயலாளர் வேல் பிரகாஷ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சேகு வேரா, விஸ்வா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.