districts

அரசு மாணவர் விடுதியில் காப்பாளர் நியமித்திடுக! திண்டுக்கல் ஆட்சியரிடம் எஸ்எப்ஐ கோரிக்கை

திண்டுக்கல், மே 2-  நிலக்கோட்டையில் உள்ள அரசு கள்ளர் மாணவர் விடுதியில் தனி காப்பா ளர் நியமித்திட வேண்டும் எனக் கோரி இந்திய மாணவர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப் பட்டது. இதுதொடர்பாக சங்கத்தின் மாவட் டச் செயலாளர் முகேஷ், ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நிலக்கோட்டை அரசு கள்ளர் மாண வர் விடுதியில் விடுதி காப்பாளர் நிய மிக்கப்படவில்லை. இதனால் வத்தலக் குண்டு விடுதி காப்பாளரே பொறுப்பு விடுதி காப்பாளராக செயல்பட்டு வருகிறார்.  மே 5 ஆம் தேதி பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கும், மே 6 ஆம் தேதி 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு நடைபெறவுள்ளது. ஆனால், விடுதியில் மின்விளக்கு வசதியில்லாததால் மாணவர்கள் படிப்பதற்கு இயலாத நிலை உள்ளது.  விடுதி சமையலர் சிவக்குமார் மாண வர்களிடம் தகாத வார்த்தைகளில் பேசி வருகிறார். படிக்க விடாமல் மாணவர்க ளை தொடர்ச்சியாக இடையூறு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.  எனவே, நிலக்கோட்டை அரசு கள்ளர் சீரமைப்பு விடுதிக்கு என தனி யாக காப்பாளர் நியமிக்க வேண்டும், சமையலர் சிவக்குமார் மீது உடனடி யாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள் ளது.