districts

காவிரியில் நீர்வரத்து குறைந்தது!

தருமபுரி, ஜூலை 23 - தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 75 ஆயிரம் கன அடியாக இருந்த நிலையில், செவ்வாயன்று பகல் 1 மணி நிலவரப்படி 53 ஆயிரம் கன அடியாக சரிந்துள்ளது. தற்போது கர்நாடகத்திலுள்ள கபினி அணையில் இருந்து விநாடிக்கு 20 ஆயிரத்து 386 கன அடி நீரும், கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து விநாடிக்கு 45 ஆயிரம் 327 கன அடி நீருமாக மொத்தம் 58 ஆயிரத்து 779 கன அடி அளவிற்கே காவிரியில் நீர் வெளியேற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஜூலை 16 அன்று காலை 43.83 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம், ஒரே வாரத்தில் 38.17 அடி அதிகரித்து, தற்போது 82.00 அடியாக உயர்ந்துள்ளது.