தருமபுரி, மே 28- சாதி ஆணவப் படுகொலையை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வலியு றுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சாதி மறுப்பு திருமணம் செய்த தம்பதியர்களை சாதியற்றவர் என சான்று வழங்கி அரசு வேலையும், பாதுகாப்பும் வழங்க வேண்டும். பஞ்சமி நிலங்களை மீட்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். சாதி ஆணவ படுகொலையை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என் பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் டி. மாதையன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செய லாளர் ஏ.குமார், நகரச்செயலாளர் ஆர்.ஜோதிபாசு, ஒன்றிய செயலா ளர் என்.கந்தசாமி, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட தலைவர் டி.எஸ்.ராமச்சந்திரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் பொ.மு.நந் தன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.கிரைஸாமேரி, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட பொருளாளர் கே. கோவிந்தசாமி உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்,
நாமக்கல்
நாமக்கல்லில் மாவட்ட ஆட்சிய ரகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு மாவட்ட பொருளாளர் எஸ்.ஆறுமுகம் தலைமை வகித் தார். மாவட்ட செயலாளர் கே.தங்க மணி கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். சிஐடியு மாவட்ட செயலா ளர் ந.வேலுசாமி வாழ்த்திப் பேசி னார். தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட துணைச் செயலாளர் கு. சிவராஜ், மாவட்டக் குழு உறுப்பினர் கள் ராமசாமி, சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சேலம்
சேலத்தில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஆர்.குழந்தைவேல் தலைமை வகித்தார். இதில், அமைப்பின் மாவட்ட செயலாளர் வி.இளங்கோ, சிபிஎம் மாவட்ட செயலாளர் மேவை சண்முகராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.குணசேகரன், டி.உதயகுமார், ஞான சவுந்தரி, மேற்கு மாநகர செயலா ளர் எம்.கனகராஜ், வடக்கு மாநகர செயலாளர் என்.பிரவீன்குமார், சேலம் தாலுகா செயலாளர் கே. எஸ்.பழனிசாமி, இந்திய ஜனநா யக வாலிபர் சங்க மாவட்ட செயலா ளர் வெங்கடேஷ், முத்துக்குமரன், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநிலக் குழு உறுப்பினர் செந்தில் குமார், சிஐடியு மாவட்ட துணை செயலாளர் சி.கருப்பண்ணன், விடு தலை சிறுத்தைகள் கட்சியின் மாந கர் மாவட்ட பொருளாளர் காஜாமை தீன் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.