தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்.19 ஆம் தேதி நடைபெற உள்ளது என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தருமபுரி மாவட்டத்தில் தேர்தல் விதி முறைகள் அமலுக்கு வந்தது. அதன டிப்படையில் தருமபுரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட எல்லையில் பறக் கும் படையினர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தொடர்ந்து வாகன சோத னையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நி லையில், செவ்வாயன்று காலை சேலத் தில் இருந்து பெங்களூருவுக்கு சென்ற ஒரு வாகனத்தினை பறக்கும் படையினர் தருமபுரி மாவட்ட எல்லையான தொப் பூர் சோதனைச்சாவடியில் நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 180 கிலோ தங்கம் மற்றும் 250 கிலோ வெள்ளி ஆப ரணங்களாக செய்யப்பட்டு, உரிய ஆவ ணங்களுடன் பெங்களூருவுக்கு கொண்டு செல்வதாக தெரியவந்தது. உரிய ஆவ ணங்கள் இருந்த போதிலும், அந்த தங் கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் தமி ழகத்திற்கு உண்டான அனுமதி இல்லாத தால் வாகனத்தை ஆய்வுக்காக தொப்பூ ரில் இருந்து பறக்கும் படையினர் தரும புரி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத் தில் கொண்டு வந்து நிறுத்தினர்.
இதுகுறித்து தேர்தல் அதிகாரிக ளுக்கு தகவல் கொடுத்ததும், சம்பவ இடத் திற்கு வந்த அதிகாரிகள் அந்த வாகனத் தில் வந்தவர்களிடம் விசாரணை மேற் கொண்டனர். அப்போது, உள்ளிருக்கும் பொருட்களை அதன் உரிமையாளர் மட் டுமே திறக்க முடியும் என்று அவர்கள் கூறினர். உடனே தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்களுக்கு சொந்தமான உரிமை யாளருக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவ ருக்காக வட்டாட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் காத்திருக்கும் நிலை ஏற் பட்டது. இதுகுறித்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வாகனத்தில் வந்த ஓட்டு நர் மற்றும் பாதுகாவலரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச் சம்பவம் அப்பகுதியினரை மட்டுமின்றி அதிகாரிகளையுமே அதிர்ச்சியடைய செய்துள்ளது.