தருமபுரி ஜூன் 15- பிஎஸ்என்எல் நிறுவனத் தில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை பணிநீக்கம் செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி தருமபுரியில் பிஎஸ் என்எல் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். தருமபுரி பிஎஸ்என்எல் பொதுமேலாளர் அலுவலகம் முன்பு பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தினர் நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு கிளை தலைவர் ஜி.உமாராணி தலைமை தாங்கினார். இதில், பிஎஸ்என்எல்யு மாவட்ட செய லாளர் பி.கிருஷ்ணன், கிளை செயலாளர் சி. முனிராஜ், ஓய்வுதியர் சங்க மாவட்ட செயலா ளர் டி.பாஸ்கரன், பொருளாளர் எம்.குப்பு சாமி ஆகியோர் கோரிக்கைகள் குறித்து உரையாற்றினர். இதில், பிஎஸ்என்எல்-லில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்களின் கடிதங்க ளுக்கு காலம் தாழ்த்தாமல் தீர்வு காண வேண்டும். பணிமாறுதல் கேட்டு விண்ணப் பித்தவர்களுக்கு பணிமாறுதல் வழங்க வேண்டும். 20 ஆண்டுகளுக்கும் மேலாக பிஎஸ்என்எல்-லில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை பணிநீக்கம் செய்யக்கூடாது. ஸ்டோர் லைன்மேன் பதவியை நிரப்பும் போது பிஎஸ்என்எல் விதிகளின் படி நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.