districts

அனைவருக்கும் வீடு திட்டத்தில் குடியிருப்பு பெற விண்ணப்பிக்கலாம்

தஞ்சாவூர், அக்.26 -  தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன் ராஜ் ஆலிவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரி யம் மூலம் “அனைவருக்கும் வீடு” திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்டம், திருக் காட்டுப்பள்ளி பேரூராட்சிக் குட்பட்ட கூடநாணல் திட்டப் பகுதியில் 240 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட் டுள்ளன. இந்த குடியிருப்பு களை ஒதுக்கீடு பெறுவதற்கு நகர்ப்புறங்களில் வசிப்ப வர்கள் விண்ணப்பிக்கலாம்.  இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பவர்களுக்கு ஆண்டு வருமானம் ரூ.3  லட்சத்திற்கும் குறைவாக இருத்தல் வேண்டும். மேலும் சொந்த நிலம்  மற்றும் வீடற்ற பொருளா தாரத்தில் நலிவடைந்த பிரிவினராக இருத்தல் வேண்டும். இத்திட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற  விதவைகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.  இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புபவர்கள் தங்கள் விண்ணப்பத்துடன் குடும்பத் தலைவர் மற்றும் தலைவி ஆகியோரின் ஆதார் அடையாள அட்டை,  உணவுப்பங்கீடு அட்டை மற்றும் வங்கிக்கணக்கு புத்தகம் ஆகிய ஆவணங் களின் நகல்களை இணைத்து, தஞ்சாவூர் மாவட் டம் திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சிக்குட்பட்ட கூட நாணல் திட்டப்பகுதியி லுள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய  அலுவலகத்தை, அலுவலக வேலை நாட்களில் (4.11.22 முதல் 9.11.22 வரை) காலை  10 மணி முதல் மாலை 5 மணி  வரை அணுகி பயன்பெற லாம்.  தகுதியான பயனாளி களுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரி யத்தின் மூலம் ஒப்புதல் பெறப் பட்டு குடியிருப்புகள் ஒதுக் கீடு செய்யப்பட உள்ளன. ஒப்புதல் பெறப்பட்ட பயனா ளிகள் வீடுகளை ஒதுக்கீடு  பெற, பயனாளி பங்க ளிப்புத் தொகையாக ரூ.1.50  லட்சத்தை வரைவோலை யாக வாரியத்திற்கு செலுத்த  வேண்டும். மேலும், விவ ரங்களுக்கு 8667350694, 9003054184, 8523962235 என்ற அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.  இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.