தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் துறைமுகத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் உலக மீன்வள தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில், மீன்வளத்துறை ஆய்வாளர் கங்கேஸ்வரி மற்றும் விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர் சங்க நிர்வாகிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், மீனவர்கள் கலந்து கொண்டனர்.