districts

img

கட்டுரைப் போட்டியில் வென்ற அரசு கல்லூரி மாணவிக்கு பாராட்டு

கும்பகோணம், மார்ச் 16 - தஞ்சை மாவட்ட நிர்வாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய  மாவட்ட அளவிலான கட்டுரைப் போட்டியில் கும்பகோணம் அரசினர் கலைக்  கல்லூரி (தன்னாட்சி) இளமறிவியல் முதலாமாண்டு தாவரவியல் மாணவி எஸ்.ஜீவரேகா 3 ஆம் பரிசாக ரூ.1000 பணப் பரிசையும் பாராட்டுச் சான்றித ழையும் தஞ்சை மண்டல கல்லூரி்க் கல்வி இணை இயக்குநர் முனைவர் தி.  அறிவுடைநம்பியிடமிருந்து பெற்றார். பரிசு பெற்ற மாணவியை கல்லூரி முதல்வர் முனைவர் க.துரையரசன் பாராட்டினார். இந்நிகழ்வில் வேதியியல் துறைத் தலைவர் பேரா.மீனாட்சி சுந்தரம், தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் காளிமுத்து, தாவரவியல் துறைத் தலைவர் முனைவர் முருகன் மற்றும் தாவரவியல் துறைப் பேராசிரி யர்கள் கார்த்திகேயன், ஜனகன், அபிராமி ஆகியோர் உடனிருந்தனர்.