districts

கழுமங்குடா இருளில் தவிக்கும் மீனவ மக்கள் வாழ்வில் ஒளியேற்றப்படுமா? மே 10 இல் கிழக்கு கடற்கரை சாலையில் மறியல்: சிபிஎம் அறிவிப்பு

தஞ்சாவூர், ஏப்.26 - சேதுபாவாசத்திரம் அருகே கழு மங்குடா கிராமத்தில், ஐஸ்வாடி பகுதி யில், 30 வருடங்களுக்கும் மேலாக  மின்வசதி இன்றி மீனவக் குடும்பத் தினர் இருளில் தவித்து வருகின்ற னர்.  இவர்களுக்கு, மின் இணைப்பு  வழங்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மே 10 (செவ்வாய்க்கிழமை) அன்று கிழக்கு கடற்கரை சாலையில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவா சத்திரம் ஒன்றியம் கழுமங்குடா கிரா மத்தில் ஐஸ்வாடி என்ற பகுதியில்  15-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங் கள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக மின் வசதி இன்றி ஆதிவாசி களை போல் இருளில் வசித்து வரு கின்றனர்.  இப்பகுதி மக்களுக்கு இதுவரை மின் வசதி கிடைக்கவில்லை. கடல்  தொழிலில் ஈடுபட்டு வரும் மீனவர்க ளாகிய இக்குடும்பத்தினர், இரவில்  மின் வசதி இல்லாததால் பாம்பு கள், விஷப்பூச்சிகள் நடமாட்டத்தில்,  குழந்தைகளை வைத்துக்கொண்டு தவித்து வருகின்றனர். மாணவர் களுக்கு அரசு பொதுத்தேர்வு தொடங்க உள்ள நிலையில், பனியி லும், மழையிலும் பெண் குழந்தை கள் தெருவில் உள்ள மின்விளக்கு ஒளியில் அமர்ந்து படிக்கின்றனர். குடும்ப அட்டை, வீட்டு வரி ரசீது இருந்தும் ட அரசு நிர்வாகம் மின் வசதி அளிக்க மறுக்கிறது.  இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற் குழு உறுப்பினர் ஆர்.மனோ கரன், மூத்த தோழர் வீ.கருப்பையா,  சேதுபாவாசத்திரம் ஒன்றியச் செயலா ளர் ஆர்.எம்.வீரப்பெருமாள், சிபிஎம் நிர்வாகிகள் அப்பகுதிக்கு நேரில் சென்று, மீனவக் குடும்பத்தினரை சந்தித்து குறைகளை கேட்டறிந்தனர்.

 பின்னர் சிபிஎம் மாவட்டச் செயற் குழு உறுப்பினர் ஆர்.மனோகரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தேர்தல் நேரங்களில் மட்டும், வாக்கு றுதிகளை பெறுவதற்காக மின் வசதி ஏற்படுத்தித் தரப்படும் என்று சொல்லும்  அரசியல் கட்சிகள், பொறுப்புக்கு வந்தவுடன் இப்பகுதி மக்களின் அடிப்படை உரிமையான மின்  வசதியை ஏற்படுத்தி தர மறுக்கின்ற னர்.  இப்பகுதி மக்கள் பலமுறை அரசு  நிர்வாகத்திடம் மனு அளித்தும்  கோரிக்கை நிறைவேற்றப்பட வில்லை. பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக்குமார், கீழ்வே ளூர் சட்டமன்ற உறுப்பினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  சட்டமன்றக் குழுத் தலைவருமான  நாகைமாலி ஆகியோர் மீன்வளத் துறை உயர் அலுவலர்களை சந்தித்து  இப்பகுதி மக்களுக்கு மின்சார வசதி கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளனர்.  எனினும், இதுவரை இப்பகுதி மக்களின் கோரிக்கை நிறைவேற்றப் படாத நிலைமை உள்ளது. எனவே, இப்பகுதி மக்களுக்கு அடிப்படை உரி மையான மின் வசதியை வழங்க வேண்டும் என வலியுறுத்தி மே 10  (செவ்வாய்க்கிழமை) கிழக்கு கடற்கரை சாலையில், கழுமங்குடா பகுதியில் சாலை மறியல் நடத்தப் படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய குழு முடிவு செய்துள் ளது. வருவாய்த்துறை, மீன்வளத் துறை, மின்வாரியத் துறை, பாதிக்கப் பட்ட மக்களுக்கு உடனடியாக தெரு விளக்கு, மின் இணைப்பு வசதிகளை  செய்து தர வேண்டும்” என்றார்.