சென்னை, டிச. 6- சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நீலாங்கரையில் சில்லறை இறைச்சி விற்பனை கடை திறக்கப்பட்டுள்ளது. அம்மா நானா வணிக வளாகத்தில் இஸ்காபோ திறந்துள்ள இந்த விற்பனையகத்தில்ல் அசைவ உணவுப் பிரியர்களுக்கு தரமான கோழி இறைச்சி, ஆட்டிறைச்சி மற்றும் கடல் உணவுப் பொருட்கள் கிடைக்கும் என்று பிஎம்ஆர் குழுமங்களின் துணைத் தலைவர் மனோஜ் பீடா கூறினார். உள்நாட்டுப் பண்ணைகளிலிருந்து கொள்முதல் செய்யப்படும் இறால், மீன், ஆடு, கோழி இறைச்சி களை கடுமையான பல தரச் சோதனைகள் மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட குளிர் பதன முறையில் அதன் புதுமை தன்மை மாறாமல் பாதுகாக்கப்பட்டு நுகர்வோ ருக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் கூறினார். உடனடியாக சமையல் செய்ய வசதியாக மசாலா கலக்கப்பட்ட இறால் மற்றும் கோழிஇறைச்சியும் இங்கு கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.