தஞ்சாவூர், ஜூலை 2 - தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி கடைவீதி, பட்டுக்கோட்டை சாலை, அறந்தாங்கி முதன்மைச் சாலை, சேது சாலை, ஆவணம் சாலை ஆகிய இடங்களில் சாலை ஆக்கிர மிப்பு அகற்றப்பட்டு, சாலை நடுவே தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டு, சாலை விரி வாக்க பணிகள் நடைபெற்றன. இதனொரு பகுதியாக ஆவணம் சாலையில் மழை நீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெற் றது. இதில் ஓர் இடத்தில் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கப்பட்டு, அங்கி ருந்து சாலையின் குறுக்கே மற்றொரு பக்கம் உள்ள மழை நீர் வடிகால் வாய்க்காலுடன் இணைப்பதற் காக, ஆவணம் சாலையில், முன்னாள் நகரத் தந்தை வேலாயுதம் செட்டியார் வீடு அருகே, சாலையின் குறுக்கே சிறுபாலம் அமைக்கும் பணி கடந்த ஒரு மாதமாக நடை பெற்று வருகிறது. அதில் ஒரு பகுதி பாலப் பணி முடிவடைந்த நிலை யில், மற்றொரு பகுதி யில் இதுவரை பணி முடிக்கப் படாமல் உள்ளது. இதனால் இந்த வழியில் வாகனங்கள் செல்வதில் இடையூறு ஏற்பட்டு போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. மேலும் சாலைப் பணி நடை பெறுவது குறித்து எச்ச ரிக்கை பலகை வைக்கப்படா ததால் இருசக்கர வாக னங்கள், நான்கு சக்கர வாக னங்களில் வருவோர் அரு கில் வந்து தடுமாறி விபத்து கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, எச்சரிக்கைப் பலகை வைக்கவும், சாலைப் பணிகளை விரைந்து முடித்து போக்குவரத்து பயன்பாட் டிற்கு கொண்டு வர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகரக் குழு சார்பில் செயலாளர் வே. ரெங்கசாமி நெடுஞ்சாலை துறையைக் கேட்டுக் கொண் டுள்ளார்.