தஞ்சாவூர், மே 29 - தஞ்சையில் நடைபெற்ற விவசாயி கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் என்.வி.கண்ணன் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலி வரிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: “டெல்டா மாவட்டமான தஞ்சா வூர் பகுதியில், விவசாய விளைபொருட் களை, குறிப்பாக நெல் கொள்முதல் செய்யப்பட்டு சேமித்து வைக்க போது மான பாதுகாப்பு வசதியுடன் கூடிய சேமிப்பு கிடங்குகள் இல்லாமல் உள்ளன. இதன் விளைவாக கடந்த குறுவை பரு வத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல் கொள்முதல் செய்யப்பட்டு, தஞ்சை முன்னையம்பட்டி திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டது. அந்த நெல்லை முறையாக உரிய காலத்தில், அங்கிருந்து அப்புறப்படுத்தப் பட்டு, பயன்பாட்டுக்குக் கொண்டு செல்லாததால், மழை, வெயிலில் பாதிக் கப்பட்டு தரமிழந்த நெல் மூட்டைகளாக மாறின. இதனை உயர் அதிகாரிகள் திருப்பி அனுப்பினர். இதனால், தான் பாதிக்கப்படுவோம் என்பதால், அங்கு ஆய்வாளராக பணியாற்றி வரும் வீரை யன் என்பவர் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட நேரிட்டது. இதற்கு காரணம் பாதுகாப்பான சேமிப்பு கிடங்கு இல்லாததே. எனவே, விவசாயிகளின் சூழ்நிலையை உணர்ந் தும், உற்பத்தி செய்யப்படும் பொருட் கள் நாசமாவதை தடுத்திடவும், அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தேவை யான அளவு பாதுகாப்பு கிடங்குகள் அமைத்திட வேண்டும். நடப்பாண்டு பாசனத்திற்காக 20 தினங்களுக்கு முன்னதாகவே மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இது விவசாயி களுக்கு மகிழ்ச்சி தருகிறது. எதிர்பார்ப்பு க்கு முன்னதாகவே தண்ணீர் திறக்கப்பட் டதால், தற்போது நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை மிக துரித மாக செய்து முடிப்பதன் மூலம் கடை மடை வரை தண்ணீர் செல்ல இயலும். மேலும், அனைத்து பகுதி கால்வாய் களையும் விட்டுவிடாமல் தூர்வார வேண்டும். விவசாயிகள் தடையின்றி விவசாயப் பணிகள் செய்திட ஏதுவாக, தட்டுப்பாடின்றி விதை மற்றும் இடு பொருட்கள், உரம் கிடைக்கவும் நடவ டிக்கை எடுக்க வேண்டும்.” இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது.