districts

பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகள் இழப்பீடு கிடைக்குமா? விவசாயிகள் வேதனை

பாபநாசம், ஜன.24- தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா அய் யம்பேட்டை அருகே அறு வடைக்குத் தயாரான நெல் வயல்களில் அட்டகாசம்  செய்யும் காட்டுப் பன்றி களை வனத்துறையினர் பிடிக்க வேண்டுமென விவ சாயிகள் கோரிக்கை விடுத் துள்ளனர்.  அய்யம்பேட்டை அருகே உள்ளிக்கடை, பெருமாள்  கோவில், கணபதி அக்ர காரம், புத்தூர், பட்டுக்குடி, மணலூர், தேவன்குடி, வீர மாங்குடி உள்ளிட்ட காவிரி, கொள்ளிட கரையோர கிரா மங்களில் நூற்றுக்கணக் கான ஏக்கரில் விவசாயிகள் சம்பா, தாளடி நெல் சாகுபடி செய்துள்ளனர். தற்போது,  நெற்பயிர்கள் அறு வடைக்கு தயாரான நிலை யில் உள்ளன.   இதற்கிடையே நெல் வயல்களில், இரவு நேரங்க ளில் காட்டுபன்றிகள் கூட்டம்,  கூட்டமாக வந்து நெற்பயிர் களை மிதித்தும், அதன்மீது புரண்டும் சேதப்படுத்து கின்றன. இதில் அறு வடைக்கு தயாரான நெற் பயிர்கள் சாய்ந்து நெல் மணி கள் வயலிலேயே கொட்டி விடுகின்றன. மழை, வெள் ளம், வறட்சி போன்ற பல் வேறு பிரச்சனைகளை சந்  தித்து விவசாயம் செய்துள்ள எங்களால், தற்போது காட்டு பன்றிகளின் அட்டகாசத்தை எதிர்கொள்ள முடிய வில்லை.  எனவே வனத்துறை யினர் காட்டுப் பன்றிகளை பிடித்துச் செல்ல மாவட்ட நிர்  வாகத்தினர் உடனடி நடவ டிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட வயல்களை வேளாண் துறை அதிகாரி கள் ஆய்வு செய்து, காப் பீட்டு இழப்பீடு வழங்க ஏற் பாடு செய்ய வேண்டும் என  விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.