தஞ்சாவூர், ஜூலை 27- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே விளங்குளம் கிராம உதவியாளராக அதே ஊர் ஆதிதிராவிடர் தெருவைச் சேர்ந்த பூமிநாதன்(29) என்பவர் பணியாற்றி வந்தார். இவர் அப்பகுதியில் உள்ள காட்டாற்றில் அனுமதியின்றி மாட்டு வண்டிகள் மற்றும் டிராக்டரில் மணல் அள்ளுவது குறித்து வருவாய்த்துறைக்கு தகவல் அளித்து உரிய நடவடிக்கை எடுக்க காரணமாக இருந்தார். இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு செப்.9 ஆம் தேதி இரவு பட்டங்காடு கிராமத்தில் ஒரு முள்புதரில் படுகாயங்களோடு பூமிநாதன் கிடந்தார். இதுகுறித்து தகவல் வந்ததும் சின்னையா அங்கு சென்று மகனை மீட்டு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால், சிகிச்சை பல னின்றி செப்.10 அன்று பூமிநாதன் உயிரிழந்தார். இதுகுறித்து பேராவூரணி காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்தபோது, பட்டங்காடு கிராமத்தில், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த வீ.சீனிவாசன் (35), அவரது சகோதரி க.அல்லிராணி (42), ப.அண்ணாமலை (30), ப.சந்திரபோஸ் (32), கா.அய்யப்பன் (30) ஆகியோர் மணல் திருட்டு தொடர்பாக முன்விரோதம் ஏற்பட்டு, பூமிநாதனை கட்டை, கம்பால் தாக்கியதில் படுகாயமடைந்து உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து 5 பேரும் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்தனர். இந்நிலையில், இது தொடர்பான வழக்கு தஞ்சாவூர் மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் (குடியுரிமை பாது காப்பு) நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ரவி, குற்றம் சாட்டப்பட்ட 5 பேருக்கும் ஆயுள் தண்டனை யும், தலா ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.