districts

முன்னாள் படைவீரரை சார்ந்த சிறார்களுக்கான கல்வி உதவித்தொகை அதிகரிப்பு

தஞ்சாவூர், நவ.27 - சைனிக் பள்ளிகளில் முன்னாள் படைவீரர் களின் சிறார்களுக்காக, 25 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதால், அப்பள்ளி களில் முன்னாள் படைவீரர்களின் சிறார்கள்  அதிக அளவில் சேர்ந்திட ஊக்கமளிக்கும் வகையில் ஆண்டிற்கு ரூ.25,000 மற்றும் ஐஐடி, ஐஐஎம், தேசிய சட்டப் பள்ளி போன்ற  நிறுவனங்களில் பயில்வதை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டிற்கு ரூ.50,000 கல்வி  ஊக்கத் தொகையாக 2022-23ம் கல்வி யாண்டு முதல் வழங்கப்படவுள்ளது.  தமிழ்நாட்டை பிறப்பிடமாகக் கொண்டு  தமிழ்நாட்டில் வசிக்கும் படை அலுவலர்  தகுதிக்கு கீழ் உள்ள முன்னாள் படை வீரர்கள் இக்கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் 2022-23 ஆம் கல்வியாண்டு முதல் 1 ஆம்  வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயி லும் முன்னாள் படைவீரர் சிறார்களுக்கான தொகுப்புநிதி - கல்வி உதவித்தொகை கீழே உள்ளவாறு உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.  1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் சிறார்களுக்கான கல்வி உதவித்தொகை ரூ.500-லிருந்து ரூ.2,000-மாக உயர்த்தப்பட்டு உள்ளது. 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை  பயிலும் சிறார்களுக்கான கல்வி உதவித் தொகை ரூ.800-லிருந்து ரூ.4,000-மாக உயர்த்தப்பட்டுள்ளது. 9 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் சிறார்களுக்கான கல்வி  உதவித்தொகை ரூ.1,000-லிருந்து ரூ.5,000-மாக உயர்த்தப்பட்டுள்ளது.  11 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும்  சிறார்களுக்கான கல்வி உதவித்தொகை ரூ.1,500-லிருந்து ரூ.6,000-மாக உயர்த்தப் பட்டுள்ளது. எனவே, கல்வி ஊக்கத்தொகை மற்றும் உயர்த்தி வழங்கப்பட்டுள்ள கல்வி உதவித் தொகையினையும் தகுதியான முன்னாள் படைவீரர், அதனைச் சார்ந்தோர்  பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர்  தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள் ளார்.