districts

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படும் ஒன்றிய அரசு வணிகர் சங்க பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா ஆதங்கம்

தஞ்சாவூர், டிச.22-  கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு ஆதரவாக செயல்படுவ தாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் ஏ.எம்.விக்கிரம ராஜா தெரிவித்தார்.  தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத் தில் மேயர் சண்.ராமநாதனை புதன் கிழமை சந்தித்த அவர் பின்னர் செய்தியா ளர்களிடம் தெரிவித்ததாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில், வணி கர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தியும், வியாபாரிகளுக்கு புதிய சந்தை அமைத்துக் கொடுத்ததில் இடர் பாடுகளை நீக்கியும், காமராஜர் சந்தை  உள்பட பல்வேறு கடைகளின் பிரச்சனை கள் தீர்த்து, வியாபாரிகளுக்கு மீண்டும் கடைகளை கொடுத்ததற்காகவும் தமிழ் நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மேயர், ஆணையருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். அதிகமான வாடகைக்கு எடுக்கப் பட்ட கடைகளை, வருகிற காலத்தில் அவர்களால் நடத்த முடியாத நிலை  ஏற்பட்டுள்ளது. இதனால், அக்கடை களைத் திரும்பப் பெற்றுக் கொள்கிற நிலையை மாற்றி, மீண்டும் நியாயமான வாடகையை சீர்படுத்தி, கணிசமான வாட கையுடன் வியாபாரிகள் பயன்படும் வகை யில், மேயர் வாய்ப்பை ஏற்படுத்தித் தர  வேண்டும். வண்டிப்பேட்டை உள்ளிட்ட பகுதி களிலுள்ள கடைகளில், வியாபாரி களுக்கு சிறு, சிறு பிரச்சனைகள் இருக் கிறது. இதை சரி செய்து தருவதாக மேயர் கூறியுள்ளார். இதேபோல, அறநிலை யத் துறை கடைகள் வாடகை பிரச்சனை, குடியிருப்போர் வாடகை பிரச்சனை கடு மையாக உள்ளது. வாடகை செலுத்தப்பட வில்லை என்றால், பொருள்களுடன்  கடைகளுக்கு சீல் வைக்கப்படு கிறது. எனவே, அக்கடைகளுக்கு நியாய மான வாடகை நிர்ணயிக்க வேண்டும். இது தொடர்பாக தமிழக அரசின் தலைமைச்  செயலர் தலைமையில் குழு அமைக்கப் பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிறு, குறு உற்பத்தியாளர்கள் தாங்கள்  உற்பத்தி செய்யும் பொருள்களை நெகி ழிப் பையில் போட்டு தருவர். இது தொடர் பாக ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள சட்டம், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு உகந்ததாக இருக்கிறது. உற்பத்தி பொருள் களின் கவரிலேயே குறியீட்டு பெயர் இருக்க வேண்டுமானால், குறைந்தது ரூ.50 லட்சம் முதலீடு செய்தால்தான் தொழில்  செய்ய முடியும். இவற்றை மகளிர் சுய  உதவிக் குழுவினர், சாதாரண உற்பத்தியா ளர்களால் செய்ய முடியாது. பெரு நிறுவனங்களின் உற்பத்தி பொருள்களுக்கு ஒருமுறை பயன்படுத்தப் படும் தடை செய்யப்பட்ட நெகிழி பைகள்  பயன்படுத்த அனுமதி வழங்கப்படு கிறது. பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாகவும், உள்ளூர் நிறுவனங் களுக்கு எதிராகவும் செயல்பட்டால், உள்நாட்டு வணிகம் முழுமையாக முடங்கி விடும். எனவே, இச்சட்டத்தை முறைப் படுத்த வேண்டும். சுழற்சி முறையில் 75 சதவீதம் மைக் ரான் நெகிழிக்கு ஸ்டிக்கர் ஒட்டி விற்பனை  செய்ய தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும். அதில், அச்சிட்டுத்தான் விற் பனை செய்ய வேண்டும் எனக் கூறி னால், எங்களால் இயலாத விஷயம். எங்க ளுக்கு உத்தரவிடும் அரசு, பன்னாட்டுப் பொருட்களுக்கும் தடை விதிக்க வேண் டும். இல்லாவிட்டால், கார்ப்பரேட் நிறுவ னங்களால்தான் வாழ முடியும். சாமானிய  வணிகர்களால் வாழ முடியாது என்ற நிலை ஏற்படும்.” இவ்வாறு விக்கிரமராஜா தெரிவித்தார்.