districts

ஓடும் பேருந்தில் ஏற முயன்ற பள்ளி மாணவர் தவறி விழுந்து பலி

கும்பகோணம், பிப்.28 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அரியதிடல் கிராமத்தை சேர்ந்த அமா னுல்லா மகன் முகமது ஆதில் (16). இவர் கும்ப கோணத்தில் உள்ள தனியார் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்தார்.  இந்நிலையில் திங்களன்று பள்ளிக்கு செல்ல அவ்வழியே, நரசிம்மபுரத்தில் இருந்து  கும்பகோணம் நோக்கி செல்லும் அரசு டவுன் பேருந்தில் ஓடிச் சென்று ஏற முயன்றுள் ளார். இதில் நிலைதடுமாறி சாலையில் தவறி  விழுந்ததில், தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து பேருந்து ஓட்டுநர் பக்கிரி சாமி உடனடியாக பேருந்தை நிறுத்தி, பயணி களை இறக்கி விட்டு படுகாயமடைந்த முகமது  ஆதிலை பேருந்தில் ஏற்றிக்கொண்டு, கும்ப கோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக் காக கொண்டு சென்றார்.  அங்கு முகமது ஆதிலை பரிசோதனை செய்த மருத்துவர், மாணவர் கொண்டு வரும்  வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள் ளனர். இதுகுறித்து பட்டீஸ்வரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.