districts

மூத்த குடிமக்களுக்கான பயண கட்டணச் சலுகையை மீண்டும் வழங்குக! ரயில் பயணிகள் பாதுகாப்பு சங்கம் ஆர்ப்பாட்டம்

கும்பகோணம், டிச.27 - கொரோனா பெருந் தொற்றுக்கு முன்பு ரயில் பய ணத்தில் மூத்த குடிமக்கள் ஏராளமானோர் சென்று வந்த னர். அப்போது பயண சலு கையாக ஆண்களுக்கு 60  வயது, பெண்களுக்கு 55  வயது என நிர்ணயிக்கப் பட்டு, மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகை வழங்கப் பட்டு வந்தது. கொரோனா காலத்தில், ஒன்றிய அரசு நிதி நெருக்கடி எனக் கூறி கட்டண சலுகை யை பறித்தது. தற்போது இயல்பு நிலை திரும்பி விட்  டது. எனவே ரத்து செய்யப்  பட்ட மூத்த குடிமக்களுக் கான ரயில் பயண கட்டணச் சலுகையை திரும்ப பெற வலியுறுத்தி கும்பகோணம் ரயில் பயணிகள் பாது காப்பு சங்கம் சார்பில் கும்ப கோணம் ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஓய்வூதியர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.ராஜகோபாலன் தலைமை வகித்தார். வட்டச் செயலாளர் பக்கிரிசாமி, அரசு போக்குவரத்து ஓய்வூ தியர் சங்க நிர்வாகி ஆர்.மனோகரன், தஞ்சை மாவட்ட சிஐடியு தலைவர் எம். கண்ணன், திருவிடைமரு தூர் சங்க தலைவர் சிவ ராமன், செயலாளர் கண்ணா மணி, காவல்துறை ஓய்வூதி யர் சங்க மாநில துணைத்  தலைவர் கல்யாணசுந்தரம், கோட்ட செயலாளர் சந்திர மோகன் உள்ளிட்டோர் பங் கேற்றனர்.