districts

img

மாற்றுத்திறனாளிகள் சங்க  திருப்பனந்தாள் ஒன்றிய மாநாடு

 கும்பகோணம், மே 22- தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் ஒன்றியம் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் முதல் ஒன்றிய மாநாடு நடைபெற்றது. மாநாட்டை மாநில துணைத்தலைவர் கணேசன் துவக்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் பி.எம்.இளங்கோவன், வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார், தமுஎகச மாவட்ட தலைவர் சா.ஜீவபாரதி ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாநிலத் தலைவர் பி.ஜான்சிராணி நிறைவுரையாற்றினார். மாநாட்டில், கிளைத் தலைவராக முத்துசாமி, செயலாளராக ஏ.எஸ் பாரதி உள்ளிட்ட 15 பேர் கொண்ட ஒன்றியக் குழு தேர்வு செய்யப்பட்டது.

;