தஞ்சாவூர், மே 24 - தஞ்சாவூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக, தொகுதி IV தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் மே 4 ஆம் தேதி முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஏற்கனவே போட்டித் தேர்விற்கு தயாராகி வரும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் மாதிரித் தேர்வு வகுப்புகள் வாரந் தோறும் செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்பட உள்ளன. தமிழ்நாடு அரசுப் பணியா ளர் தேர்வாணையத்தின் திருத்தப் பட்ட பாடத்திட்டத்தின்படி தொகுதி IV தேர்விற்கான மாதிரித் தேர்வு நடத்தப் பட இருக்கிறது. இதில் 15 அலகுத்தேர் வுகள் மற்றும் 5 முழு தேர்வுகள் சமச்சீர் பாடத்திட்டத்தின்படி நடத்தப் படும். இம்மாதிரித் தேர்வுகள் 26.5. 2022 முதல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தஞ்சாவூரில் நடைபெறும். எனவே, இம்மாதிரித் தேர்வில் கலந்து கொள்ள விரும்பும் இளைஞர் கள் 04362-237037 என்ற தொலை பேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டோ அல்லது 8110919990 என்ற வாட்ஸ்அப் எண்ணிலோ பதிவு செய்து கொள்ளுமாறு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.