தஞ்சாவூர், ஏப்.17 - தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை மகாராணி திருமண மண்டபத்தில் சனிக் கிழமை பாரம்பரிய விவசா யிகள், சாதனையாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் மண மக்கள், பெற்றோர்கள் சந்திப்பு கூட்டம், பாரம்பரிய விவசாயம் மற்றும் பாரம் பரிய உணவின் மகத்துவத் தையும் இன்றியமையாமை யையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் வகையில் நடை பெற்றது. இவ்விழாவில் ரிஷியூர் ஆர்.கே.எம்.செந்தில் உமை யரசி வரவேற்றார். பேராசிரி யர் எஸ்.பிச்சை தலைமை வகித்தார். தமிழகம் முழுவ தும் இருந்து 250-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அனைவருக் கும் மதிய உணவாக ரிஷியூர் ஆர்.கே.எம்.இயற்கை வேளாண் பண்ணையில் உற்பத்தி செய் யப்பட்ட பாரம்பரிய அரிசி வகைகளான கருப்பு கவுனி பொங்கல், பூங்கார் சாம்பார் சாதம், கருடன் சம்பா தயிர்சாதம் வழங்கப்பட்டது.