districts

திருஆரூரான் சர்க்கரை ஆலை போராட்டம் தமிழ்நாடு முதல்வர் தலையிட வேண்டும் கும்பகோணம் கோட்டாட்சியரை விவசாயிகள் முற்றுகை

கும்பகோணம், ஜன.20- தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருமண்டங்குடி திருஆரூ ரான் சர்க்கரை ஆலை நிர்வாகம், விவசாயி கள் பெயரில் மோசடியாக வங்கியில் கடன் பெற்றதை திரும்பச் செலுத்தவும், கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வட்டியுடன் செலுத்தவும் ஆலை நிர்வாகத்தை தமிழ்நாடு அரசே எடுத்து நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 52 நாட்களாக கரும்பு விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்நிலையில், கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட் சியர் பூர்ணிமா தலைமையில் விவ சாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்தில் தமிழ்நாடு விவசாய சங்க தஞ்சை மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார், துணைத்தலைவர் கணேசன், குடந்தை ஒன்றியச் செயலாளர் ராஜா, திருவிடைமருதூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் முருகன், வடக்கு ஒன்றியச் செயலாளர் சுந்தர், திருப்பனந்தாள் ஒன்றியத் தலைவர் கலைமணி, கரும்பு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் சரபோஜி, செந்தில், ரவி காவேரி, விவசாயிகள் சங்க தலைவர் விமலநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது கோட்டாட்சியரிடம் திரு ஆருரான் சர்க்கரை ஆலையில் நடைபெற்ற முறைகேடு சம்பவம் குறித்து தமிழ்நாடு முதல்வர் தலையிட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து கோட்டாட்சியர் பூர்ணிமா அளித்த பதில் விவசாயிகளுக்கு திருப்தி இல்லாததால் கூட்ட அரங்கிலேயே கோட்டாட்சியரை முற்றுகையிட்டு தமிழ்நாடு முதல்வர் நேரடியாக கரும்பு விவசாயிகளின் கோரிக்கையில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என முழக்கமிட்டனர். ஆனால், கோட்டாட்சியர் பூர்ணிமா திடீரென்று எழுந்து சென்றார். இதனால், விவசாயிகள், கரும்பு விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற தொடர் முழக்கமிட்டு முற்றுகையில் ஈடுபட்டனர்.