கும்பகோணம், டிச.22- திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை பிரச்சனையில் தமிழக முதல்வர் தலையிட வேண் டும் என வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தஞ்சாவூர் மாவட்டம் கும்ப கோணம் அருகே உள்ள திருமண் டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்புக்கான நிலுவைத் தொகை மற்றும் ஒன்றிய-மாநில அரசுகள் வழங்கிய கரும்புக்கான ஊக்கத்தொகையை வட்டியுடன் வழங்க வேண்டும். விவசாயிகள் பெயரில் வங்கி களில் மோசடியாக வாங்கிய பல கோடி ரூபாய் கடன் தொகையை தள்ளுபடி செய்து, வங்கி கடன் இல்லா சான்றிதழ் வழங்க வேண் டும். கடன் பெறாமலேயே விவசாயி களின் பெயரில் சிபில் குறியீடு இருப்பதை உடனே ரத்து செய்ய வேண்டும். விவசாயிகள் வழங்க வேண்டிய கரும்புத் தொகை அனைத்தையும் வழங்கிய பின்னர், புதிய நிர்வாகம் ஆலையில் பரா மரிப்பு பணியை தொடங்க வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் கரும்பு விவசாயி கள் கடந்த 25 நாட்களாக ஆலை யின் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் தமிழக முதல்வர் தலை யிட வேண்டும் என வலியுறுத்தி கரும்பு விவசாயிகளுக்கு ஆதர வாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க சார்பில் கும்பகோணம் கோட் டாட்சியர் அலுவலகம் முன்பு கரும்புடன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஐ தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சாமு.தர்மராஜன் தலை மை வகித்தார். பொதுச்செயலாளர் பி.எஸ். மாசிலாமணி கண்டன உரையாற்றினார். சிபிஐ மாவட்ட செயலாளர் மு.அ.பாரதி, சிபிஎம் ஒன்றிய செயலாளர் பி.ஜேசுதாஸ், கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் ராஜா, மாவட்ட துணைத் தலைவர் கணேசன், விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இறுதியாக கும்ப கோணம் கோட்டாட்சியர் பூர்ணி மாவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.