தஞ்சாவூர், மே 16 - ஒன்றிய, மாநில அரசு நடத்தும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பு கள் கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகிறது என தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன் ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார். ஒன்றிய மற்றும் தமிழக அரசு நடத்தும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பு களை, கல்வித் தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பும் நிகழ்ச்சியை, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டா லின், கடந்த மார்ச் 20 ஆம் தேதி தொடங்கி வைத்தார். கல்வி தொலைக்காட்சியில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு சீரு டைப் பணியாளர் தேர்வு வாரியம், ஒன்றிய அரசு பணியாளர் தேர்வா ணையம், பணியாளர் தேர்வாணை யம், ரயில்வே தேர்வு வாரியம், வங்கிப் பணியாளர் தேர்வு நிறு வனம் போன்ற முகமைகளால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக் கான பயிற்சி வகுப்புகள், ஊக்க உரைகள், முந்தைய ஆண்டுகளில் வினாத்தாள் பற்றிய கலந்துரை யாடல், நடப்பு நிகழ்வுகள் ஆகிய பல்வேறு நிகழ்ச்சிகள் தினந்தோ றும் காலை 7 மணி முதல் 9 மணி வரையிலும், இதன் மறு ஒளிபரப்பு இரவு 7 மணி முதல் 9 மணி வரையி லும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள், தனியார் தொலைக்காட்சி அலைவரிசைகள் ஏர்டெல் டிடிஎச்-821, சன் டிடிஎச்-33, டாட்டா ஸ்கை டிடிஎச்-1554, வீடியோ கான் டி2எச்-597, தனியார் கேபிள் டாக்-200, டிசிசிஎல்-200 உள்ளிட்ட அலைவரிசைகளில் ஒளி பரப்பப்படுகிறது. போட்டித் தேர்வுக்குத் தயாரா கும் மாணவ, மாணவிகள் கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பா கும், போட்டித் தேர்வுகளுக்கான இந்த பயிற்சி வகுப்புகள் மற்றும் இதர நிகழ்ச்சிகளை கொண்டு பய னடையுமாறும், கூடுதல் விவரங்க ளுக்கு 04362-237037 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.