districts

திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு இரவு நேர மருத்துவரை நியமிக்க வேண்டும் மாதர் சங்க ஒன்றிய மாநாடு வலியுறுத்தல்

தஞ்சாவூர், ஜூன் 18 -  அனைத்திந்திய ஜனநா யக மாதர் சங்கத்தின், பூத லூர் வடக்கு ஒன்றிய 3  ஆவது மாநாடு திருக்காட்டுப் பள்ளியில் சந்திரா தலைமை யில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் எஸ்.தமிழ்செல்வி, மாநிலக் குழு உறுப்பினர் பி. கலைச்செல்வி, ஒன்றியத் தலைவர் ஏ.சந்திரா, ஆகி யோர் பேசினர். ஒன்றியத் தலைவராக டி.விசாலாட்சி, செயலாளராக பி.கலைச் செல்வி, பொருளாளராக ஆர்.சாந்தி உள்ளிட்ட 15 பேர் கொண்ட ஒன்றியக்குழு தேர்வு செய்யப்பட்டது.  திருக்காட்டுப்பள்ளி அரசு  மருத்துவமனைக்கு இரவு நேர மருத்துவரை நியமனம் செய்ய வேண்டும். திருக் காட்டுப்பள்ளி பேரூராட்சி பகுதிக்கும் நூறு நாள் வேலையை அமல்படுத்த வேண்டும். நூறு நாள் வேலையை 200 நாட்களா கவும், சம்பளத்தை ரூ.600 ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும்.  வீடு இல்லாதவர்களுக்கு இலவச மனைப்பட்டா போர்க்கால அடிப்படையில் வழங்க வேண்டும். திருக் காட்டுப்பள்ளி காவேரி புது  பாலத்திலிருந்து புறவழிச் சாலை அமைத்து தர வேண்டும். புதிய பேருந்து நிலையம் ஏற்படுத்தி தர வேண்டும். 60 வயது நிரம் பிய முதியோருக்கு நிபந் தனையின்றி ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.