districts

img

திருக்கானூர்பட்டி ஜல்லிக்கட்டு: 25 பேர் காயம்

தஞ்சாவூர், ஜன.20-  தஞ்சாவூர் மாவட்டம் திருக்கானூர் பட்டியில் புனித அந்தோணியார் பொங்கலை முன்னிட்டு வியாழக்கிழமை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. போட்டியை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஜல்லிக்கட்டு துவக்கி வைத்தார். இதில், 530 காளைகள், 285 வீரர்கள் கலந்து கொண்டனர்.  காளைகளை அடக்கிய வீரர்களு க்கும், பிடிபடாத காளைகளின் உரிமை யாளர்களுக்கும் வாஷிங்மிஷின், ப்ரிட்ஜ், பீரோ, கட்டில், சைக்கிள், எவர்சில்வர் குடம், குவளை உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. காளையை அடக்க முயன்ற வீரர்கள், காளைகளின் உரிமையாளர்கள், பார்வை யாளர்கள், விழா குழுவினர் என 25 பேர் காயமடைந்தனர். இதில் 9 பேர் உள்நோயாளிகளாக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.