பாபநாசம், மார்ச் 29- தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருமண்டங்குடி சிவாலயத்தில் 13-ஆம் நூற்றாண்டை சேர்ந்த ‘‘பெண்களின் வீரத்தை போற்றும் மிகப்பெரிய புடைப்பு சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது. நடுகல் சிற்பங்களில் ஊர் மக்களை காக்கும் பொருட்டு, ஆண்கள் கையில் ஆயு தம் ஏந்தி விலங்குகளை தாக்குவது போன்று அல்லது எதிரிகளை தாக்குவது போன்று சிற்பங்கள் இருக்கும். ஆனால் பெண்கள் கையில் ஆயுதம் ஏந்தியவாறு அமைந்த சிற்பங்கள் மிகவும் அரிதானது. அந்தவகையில், திருமண்டங்குடி திரு புவனேஸ்வர சுவாமி கோயில் கருவறை கோமுகியில் அமைந்துள்ள சிற்பத்தில், ‘‘யாழி ஒன்று யானையை துரத்த, யானை குதிரையை துரத்த, ஒரு பெண் பயந்து மரத்தில் தொற்றிக் கொண்டிருக்கிறாள். மற்றொரு பெண் சிறிய வாள் ஒன்றை கையில் ஏந்தி காட்டுப்பன்றி போன்ற ஒரு விலங்கை கழுத்தில் தாக்கும் காட்சி அமைந்துள்ளது’’. மூன்றாம் ராஜராஜன் (13ம் நூற்றாண்டு) காலத்தில் அமையப்பெற்ற கல்வெட்டுகளு டன் கூடிய இந்த கோயில் சோழர்கால திருப்பணி கொண்டதாகும்.