திருவண்ணாமலை,செப்.17- திருவண்ணாமலை மரபுசார் அமைப்பின் தலைவரும் வரலாற்று ஆய்வாளரு மான ராஜ் பன்னீர்செல்வம், மோகன் இரு வரும் ஆரணி பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மேல்சீசமங்க லம் கிராமத்தின் சமூக ஆர்வலர்கள் கணேஷ், ப்ரியா வெங்கடேசன் ஆகியோரின் தகவலின் அடிப்படையில் கள ஆய்வுமேற் கொண்டனர். தொன்மைக் காலத்தில் ஸ்ரீபுருஷமங்க லம் என்றழைக்கப்பட்ட இந்த மேல்சீசமங் கலம் கிராமத்தில், 1909 ஆம் ஆண்டில் நடராஜருக்கு தனிக்கோயில் அமைத்துள் ளது. அங்கு சுமார் 6 அடி உயரம் கொண்ட பெருமாள் சிலை, ஸ்ரீதேவி சிலைகளை ஆய்வு செய்தபோது அவை 9 ஆம் நூற்றாண் டைச் சேர்ந்தது என்று தெரியவந்துள்ளது. புதர் மண்டிக்கிடந்த நடராஜர் கோவிலின் பின்புறம் பழைய கோயிலின் செங்கல் கட்டு மானம் சிதைந்து அதன் அடித்தளம் மட்டும் சில இடங்களில் எஞ்சி நிற்பது கண்டுபிடிக்க பட்டது. அந்த இடத்தில் மண்ணில் புதை யுண்ட இரண்டு அடி வீதம் இரண்டு பட்டை கல் துண்டுகள் இருப்பதை கண்டுபிடித்த னர். அதன் காலம் 11 ஆம் நூற்றாண்டை யொட்டியது எனத் கூறுகின்றனர். மேலும், இந்த ஊரில் உள்ள அரசுப் பள்ளி வளாகத்தைச் சுற்றி ஆய்வு மேற்கொண்ட தில் ஒரு பட்டிகல்லும், 4 வரித் துண்டுக் கல்வெட்டு இருந்தது. பெருமாள் கோவில் அருகே வயல்வெளியில் பாதி புதையுண்ட நிலையில் மேலும் ஒரு சிலை காணப்பட்டது. அதேபோல் ஊரின் தென்கிழக்கில் மாரியம்மன் கோவிலில் விஷ்ணு சிற்பம் உடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இந்த சிலைகளை ஆய்வு செய்ததில் அது வும் 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிற்கால பல்லவர் காலத்தை சேர்ந்தது என்று கண்டறியப்பட்டது. இது மட்டுமல்லாமல் இவ்வூரில் விஜய நகர, நாயக்கர் காலத்திய நடுகல் சிற்பங்கள் மூன்று கண்டறியப்பட்டது. இச்சிறிய ஊரில் ஆயிரம் வருடங்கள் முன்னர் சைவம் மற்றும் வைணவ சமயங்கள் தழைத்தோங்கி இருந்துள்ளதை அறிய முடிகிறது. இந்த ஊரின் தொன்மையைக் கருத் தில் கொண்டு ஊர்மக்கள் இச்சிலைகளை முறையாகப் பராமரித்து, பாதுகாத்திட முன்வர வேண்டும். மேலும் மேல்சீஷமங் கலம் ஊரை பற்றி முறையான வரலாற்று தகவல்கள் அடங்கிய புத்தகம் ஒன்று வெளி யிட வேண்டும் என்று அப்பகதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.