ரோட்டரிச் சங்கத்தை தோற்றுவித்த பால் பி.ஹாரிஸின் சிலை திறப்பு நிகழ்ச்சி தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் நடந்தது. பாபநாசம் ரோட்டரி சங்க கட்டிட வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், பால் பி.ஹாரிஸின் சிலையை மாவட்ட முன்னாள் ஆளுநர் பக்சிங் பன்னு திறந்து வைத்தார். மாவட்ட ஆளுநர்கள் சுந்தரலிங்கம், செல்வநாதன், உதவி ஆளுநர் பிரபாகரன், பாபநாசம் ரோட்டரி சங்கத் தலைவர் அறிவழகன், செயலர் சிலம்பரசன், முன்னாள் உதவி ஆளுநர்கள் சரவணன், செந்தில்நாதன், முன்னாள் தலைவர்கள் சேவியர், விவேகானந்தம், பக்ருதீன் உட்பட பலர் பங்கேற்றனர்.