districts

img

‘தஞ்சை நஞ்சை உளுந்து திட்டம்’ விவசாயிகளுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேட்டி

தஞ்சாவூர், மார்ச் 5 - வேளாண்மையில் தொடர் வளர்ச்சியானது, ஒரு மாநிலத்தின்  ஒட்டு மொத்தப் பொருளாதார  வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையும். உணவுப் பாதுகாப்பு டன் கிராமப்புற விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வும், அவர்களுக்குத் தொடர் வரு மானம் கிடைத்திடவும், மாநில  அளவில் நிலையான பொருளா தார வளர்ச்சி அடைவதற்கும் வேளாண்மையில் நீடித்த வளர்ச்சியை ஏற்படுத்துவது மிகவும் இன்றியமையாததாகும்.  இதனைக் கருத்தில்கொண்டு தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே முதன்முறையாக தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை யிலான தமிழக அரசால் வேளாண் மைத் துறைக்கென 2021 - 2022 ஆம் ஆண்டிற்கான தனி நிதிநிலை  அறிக்கைத் தாக்கல் செய்யப்பட்டது.  அதுமட்டுமின்றி வேளா ண்மைத் துறை என்ற பெயர்,  வேளாண்மை-உழவர் நலத்துறை என்று பெயர் மாற்றம் செய்யப் பட்டு இயற்கை நிலையான வேளாண்மையை ஊக்குவித்து வேளாண் வளர்ச்சிக்கு வழி வகுத்து வருகிறது. 2020 - 2021 ஆம் ஆண்டில், பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ்  குறுவை, சம்பா மற்றும் குளிர்கா லப் பருவப் பயிர்கள் 42.75 லட்சம்  ஏக்கர் பரப்பளவு பயிர்க் காப்பீடு செய்வதற்காக, 25.76 லட்சம் விவசாயிகள் பதிவு செய்தனர். குறுவை (காரீப்) பருவத்திற்கான இழப்பீட்டுத் தொகையாக ரூ.133. 07 கோடி, 2,02,335 விவசாயி களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட் டுள்ளது.

தமிழக விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு  2021 - 2022 ஆம் ஆண்டில் பயிர்க்  காப்பீட்டுத் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்துவதற் காக ரூ.2,327 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில், 2020 - 2021 ஆம் ஆண்டு சம்பா பருவப் பயிர்களுக்கான தமிழ்நாடு அர சின் பயிர்க் காப்பீட்டுக் கட்டண மானியமாக ரூ.1,553.15 கோடி, காப்பீட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. இதன் காரணமாக, 2020 - 2021  ஆம் ஆண்டு சம்பா பருவப் பயிர்களுக்கு (சம்பா நெற்பயிர் உட்பட) இழப்பீட்டுத் தொகை யான ரூ.1,597.18 கோடியில், இப்கோ - டோக்யோ பொது காப்பீட்டு  நிறுவனத்தின் மூலம் ரூ.1,089.53 கோடியும், இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் ரூ.507.65 கோடியும், சுமார் 6 லட்சம் விவசாயிகளுக்குத் தற்போது ஒப்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கான இந்த இழப் பீட்டுத் தொகையைப் பாதிக்கப் பட்ட லட்சம் விவசாயிகளுக்கு வழங்கிடும் விதமாக தமிழ்நாடு  முதலமைச்சர் 10 விவசாயிகளுக்கு  இழப்பீட்டுத் தொகையினை வழங்கித் தொடங்கி வைத்தார். மேலும், 2021 - 2022 ஆம் ஆண்டு  சம்பாப் பருவப் பயிர்களைக் காப்பீடு செய்ய 26.8.2021 அன்று தமிழ்நாடு அரசால் அரசாணை வெளியிடப்பட்டு, விவசாயிகள் சம்பா பருவப் பயிர்களுக்கான காப்பீட்டுக் கட்டணத்தை செப்டம் பர் 15 ஆம் தேதி முதல் செலுத்தி வரு கின்றனர்.  13.10.2021 வரை, 61,871 விவசா யிகளால் பயிர்க் காப்பீடு செய்யப்  பதிவு செய்யப்பட்டு, 67,556 ஏக்கர்  பரப்பளவு காப்பீடு செய்யப் பட்டுள்ளது.

தமிழ்நாடு முதல மைச்சர் இதுபோன்று விவசாயி களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறார். தஞ்சையில் நஞ்சை உளுந்து திட்டம் குறித்து மாவட்ட ஆட்சி யர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்  கூறுகையில், “இந்த ஆண்டு தற்போது வரை 60 ஆயிரம் ஏக்கரில்  உளுந்து பயிர் சாகுபடி செய்யப் பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்குப் பின்னர் உளுந்து மற்றும் பயிறு வகை பயிர்கள் தஞ்சாவூர் மாவட் டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் முயற்சியால் கூடுதலாக சாகுபடி செய்யப்பட்டு இருப்பது விவசாயி கள் மத்தியில் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. வட்டார அளவில் பரப்பு இலக்கு பிரித்தளிக்கப்பட்டு கூடுதல் பயிர் சாகுபடிக்கு தேவையான உயர் விளைச்சல் தரக்கூடிய உளுந்து  ரக விதைகள், நுண்ணுயிர் உரங்கள், ரசாயன உரங்கள் மற்றும் தேவையான இடுப்பொருட்கள், மாவட்டத்துக்குட்பட்ட அனைத்து அரசு வேளாண்மை விரிவாக்க மையங்களில் மற்றும் தனியார் விற்பனை நிலையங்களில் இருப்பு  வைக்க நடவடிக்கைகள் எடுக்கப் பட்டது.  தேவையான சான்று பெற்ற விதைகள், தனியார் விதை விற்பனை நிலையங்களிலும் இருப்பு வைக்க ஏற்பாடு செய்யப் பட்டது.

மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து கிராமங்களில், விவசாயிகளுக்கு சம்பா நெல் அறுவடைக்கு பின்,  நெல் தரிசில் உளுந்து சாகுபடி யின் முக்கியத்துவம், உடல்நலத் தில் புரதச்சத்தின் பங்கு, மண் வள  மேம்பாடு, குறைந்த நீர் தேவை, பயிரின் வேர் முடிச்சுகள் மூலம்  மண்ணில் தழைச்சத்து அதிக ரிப்பு, குறுகிய காலத்தில் வருமா னம், தென்னையில் உளுந்து, ஊடு பயிர், நெல் வயலில் வரப்பு பயிர்,  கரும்பில் ஊடுபயிர், தரிசில் தனி  பயிர் என அனைத்து வகைகளில்  உளுந்து சாகுபடி செய்ய விவ சாயிகளுக்கு கிராமந்தோறும் முகாம்கள், விழிப்புணர்வு கூட்டங் கள், நாளிதழ்களில் தொழில்நுட்ப செய்திகள், தொழில்நுட்ப பயிற்சிகள், பிரசுரங்கள் மற்றும் கலாஜதா கலை நிகழ்ச்சிகள் என  அனைத்துவித விரிவாக்க முறை களும் மாவட்ட வேளாண்மை துறை மூலம் வேளாண்மை இணை  இயக்குனர் தலைமையில் திட்ட மிடப்பட்டு செயல்படுத்தப்பட்டது.  திட்ட கிராமங்களில் தேசிய  உணவு பாதுகாப்பு திட்டம், தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டங்களில் உள்ள பயறுவகை  செயல்விளக்கங்கள் அனைத்தும்  முன்னுரிமை அளிக்கப்பட்டு முக்கிய  வேளாண் இடுப்பொருட்கள் விவ சாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்பட்டது.  

இந்த மாதம் தொடக்கத்தில் பெய்த மழையினால் தற்போது பயிர் நிலை நன்றாக உள்ளது. இந்த 60 ஆயிரம் ஏக்கரில் இருந்து 20 ஆயிரம் டன் உளுந்து உற்பத்தி  ஆகும் எனவும் இதன் மதிப்பு இன்றைய சந்தை விலையில் ரூ.140 கோடி ஆகும். இது கிரா மிய பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்”  என ஆட்சியர் தெரிவித்தார்.  தஞ்சாவூர் மாவட்டம் நரசகா யகபுரம் கிராமத்தை சேர்ந்த செல்வம் என்ற விவசாயி கூறுகை யில், தஞ்சை நஞ்சையில் உளுந்து திட்டம் மூலம் கூடுதல் உளுந்து பயிர் சாகுபடி பரப்பு, பயறு வகை பயிர்களின் அவசியம் மற்றும் முக்கியத்துவம், உற்பத்தி யினை அதிகரிக்க தேவையான தொழில்நுட்பம் குறித்த ஆலோச னைகளை வேளாண்மை அதிகாரி கள் வழங்கினர் என்றார்.

 - க.பிரேமலதா செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், தஞ்சாவூர்