தஞ்சாவூர், மார்ச் 11 - மகளிர் தினத்தை முன்னிட்டு பட்டுக்கோட் டையில் 9 மாத கர்ப்பணி பெண் ஒருவர், 6 மணி நேரம் தொடர்ந்து சிலம்பம் சுற்றி அசத்தி யுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட் டையை அடுத்த அணைக்காட்டை சேர்ந்தவர் தாஸ், ஓட்டுநராக உள்ளார். இவரது மனைவி ஷீலா (29), குத்துச்சண்டை மற்றும் சிலம்ப பயிற்சியாளராக உள்ளார். தற்போது 9 மாத கர்ப்பிணியான ஷீலா, மகளிர் தினத்தை முன்னிட்டு, அணைக்காடு சிலம்ப கூடம் சார்பில் செவ்வாய்க்கிழமை காலை 6:45 மணி முதல் மதியம் 1:35 மணி வரை சுமார் 6 மணி நேரம் தொடர்ந்து ஒற்றை மற்றும் இரட்டை சிலம்பத்தை இடைவிடாது சுற்றி அசத்தினார். இதற்காக அவருக்கு தனியார் அமைப்பான நோபல் உலக சாதனை நிறுவனம் மூலம் சாதனை விருது வழங்கப்பட்டது.