கும்பகோணம், மார்ச் 16 - நீட் தேர்வில் 435 மதிப்பெண் பெற்று வெற்றி பெற்ற கூலி தொழிலாளியின் மகன் மருத்துவ கல்லூரியில் படிப்பதற்கான முழு செலவை அரசு தலைமை கொறடா ஏற்றுக் கொண்டார். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பந்தநல்லூரை அடுத்த கருப்பூர் தோப்பு தெருவை சேர்ந்த கூலித்தொழிலாளி முருகன். மனநிலை சரியில்லாதவர் இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். இவரது இளைய மகன் பாலாஜி பந்தநல்லூர் மேல்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து பள்ளியில் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றார். இந்நிலையில் தஞ்சை மாவட்டம் கந்தர்வ கோட்டை தனியார் பள்ளியில் 11, 12 ஆம் வகுப்பு படிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் முழு செலவையும் ஏற்ற நிலையில், பிளஸ் 2 வில் அதிக மதிப்பெண் பெற்றார். தொடர்ந்து மருத்துவம் படிக்க விரும்பிய இவர், பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டு, 2021 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வில் 720 மதிப் பெண்ணுக்கு 435 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து நடைபெற்ற கலந்தாய்வில் மருத்துவம் படிக்க முடிவு செய்த பாலா ஜிக்கு, நாகப்பட்டினத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. இருப்பினும் கல்லூரியில் சேர்க்கை, விடுதிக் கட்டணம் என ரூ.53 ஆயிரம் தேவைப்பட்டுள்ளது. போதிய வருமானம் இல்லாத நிலையில், கட்டணம் செலுத்த இயலாமல் மாணவன் தவித்து வந்தார்.
அவரது இந்நிலையை அறிந்து, அரசு தலைமை கொறடாவும் திருவிடைமருதூர் சட்டமன்ற உறுப்பினருமான கோவி.செழியன் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். இதையடுத்து அரசு தலைமை கொறடா கோவி.செழியன் மாணவன் இல்லத்திற்கு நேரில் சென்று மருத்துவம் படிக்கும் பாலாஜி யின் கல்லூரி படிப்புக்கான முழு செலவை யும் ஏற்றுக் கொள்வதாக அறிவித்து முதல் தவணையாக உதவித் தொகையை வழங்கி னார். தொடர்ந்து அரசு தலைமை கொறடா கோவி செழியன் தெரிவிக்கையில், ஒன்றிய அரசின் கொடுமையான நீட் தேர்வை எதிர்த்து சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் இரண்டு முறை நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றினார். இதை ஆளுநரின் ஒப்புத லுக்கு இரண்டு முறை அனுப்பி குடியரசுத் தலைவர் வரை வலியுறுத்தப்படுகிறது. பாலாஜி போன்ற ஆயிரக்கணக்கான மாணவர்கள் எம்பிபிஎஸ் படிக்க வேண்டும் என்றால், தமிழக அரசின் கருத்தை ஏற்று, ஒன்றிய அரசிட மிருந்து ‘நீட் தேர்வு முழுமையாக ரத்து’ என்ற அறிவிப்பு வெளிவரும் வரை தமிழக அரசு தொடர்ந்து போராடும் என்றார். தொடர்ந்து பாலாஜிக்கு உதவிய ஆசிரி யர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டி னார். இந்நிகழ்ச்சியில் திருப்பனந்தாள் ஒன்றிய துணைத் தலைவர் கோ.க அண்ணாதுரை மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதே பகுதியில் அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்று இரண்டாம் ஆண்டு எம்பிபிஎஸ் படிக்கும் மாணவி பரணி காவுக்கான கல்விச் செலவு முழுவதையும் அரசு தலைமை கொறடா ஏற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.