districts

img

ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கையை விளக்கி சிபிஎம் துண்டு பிரசுரம் வழங்கல்

தஞ்சாவூர், செப்.2 - தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி கடைவீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒன்றிய மோடி அரசின் மக்கள் விரோத கொள்கைகளை மக்க ளிடம் விளக்கும் வகையில் துண்டுப்  பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. சிபிஎம் பேராவூரணி ஒன்றியக்  குழு உறுப்பினர் வே.ரெங்கசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஆர்.மனோகரன் பிரசுர  விற்பனையைத் தொடங்கி வைத்தார்.  இதில், பேராவூரணி ஒன்றியக் குழு  உறுப்பினர் எஸ்.ஜகுபர் அலி, சேது பாவாசத்திரம் ஒன்றியக் குழு உறுப்பி னர் ஆர்.எஸ்.வேலுச்சாமி மற்றும் கட்சி யினர் கலந்து கொண்டனர். கடைவீதி வியாபாரிகள், பொதுமக்களை சந்தித்து  துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
பட்டுக்கோட்டை 
பட்டுக்கோட்டை ஒன்றியம் வீரக் குறிச்சி, சுக்கிரன்பட்டி ஆகிய இடங்களில்  மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.செல்வம் தலைமையில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது. ஒன்றி யக் குழு உறுப்பினர் ஏ.உலகநாதன், சுக்கிரன்பட்டி கிளைச் செயலாளர் ஞானசேகரன், மாரிமுத்து, சூசைராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.  நம்பிவயலில் ஒன்றியக் குழு உறுப்பினர் கே.பாலசுப்ரமணியன் தலை மையில், மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது. கிளைச் செயலாளர் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வீடு வீடாகச் சென்று  மக்களை சந்தித்து ஒன்றிய மோடி அர சின் மக்கள் விரோத கொள்கைகளை விளக்கி துண்டு பிரசுரம் வழங்கினர்.
திருவாரூர்
திருவாரூர் ஒன்றியம் மாவூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு இயக்கம் வெள்ளிக் கிழமை நடைபெற்றது. மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்ட  செயற்குழு உறுப்பினர் பா.கோமதி, முன்னணி ஊழியர் மாதவன் உள்ளிட்டோர் வீடு வீடாக சென்று துண்டு  பிரசுரங்களை வழங்கினர்.

;